Friday, 3 June 2022

இன்றைய தினம்

முதன்முதலில் மின்சாரம் அதிக தூரம் எடுத்துச்செல்லப்பட்ட நாள் ஜுன் 3-1889 மின்சாரம் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். மின்சாரத்துக்கு முந்தைய உலகம் ஒரு இருட்டு கோட்டை தான். எனினும், மின்சாரம் குறித்து ஒரு சிலர் உணர்ந்திருந்தனர். கிரேக்க நாட்டு புராணங்களில் மின்சார மீன் பற்றிய தகவல்கள் உள்ளன. அந்த மீனைத் தொட்டால் ஏற்படும் மின் அதிர்ச்சி பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே மனிதர்கள் பதிவு செய்துள்ளார்கள். மின்சாரம் பற்றிய விவாதமும் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால்,18,19-ம் நூற்றாண்டுகளில் தான் அதைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. 1831-ல் மைக்கேல் ஃபாரடே மின்சாரத்தை கண்டுபிடித்தார். அவரது விதிகளின் படி தான் இன்றும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கம்பியில் நிகழும் மின்னனுக்களின் ஓட்டத்தால் மின்சாரம் உருவாகிறது. மின்னனுக்களின் ஓட்டமே ( மின்சாரமே ) மின்னலுக்கும் காரணம். மின்சாரம் ஒரு மின்சுருளில் பாய்ந்தால் அந்தச் சுருள் மின்காந்த சக்தியைப் பெறுகிறது. அனல், அணு, நீர் என பல ஆதாரங்களிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியான மின்சாரத்தைப் பல இடங்களுக்கு எடுத்துச் சென்று விநியோகம் செய்வது தனி அறிவியல். மின்விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் ஒரு தெருவில் தெருவிளக்குகளை எரியவைத்தும் காட்டினார். பிறகு நீண்ட தூரம் மின்சாரம் எடுத்துச் செல்லப்பட்டது 1889-ம் ஆண்டு இதே நாளில் தான். அமெரிக்காவின் வில்லாமிட்டி அருவியில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓரிகன் என்னுமிடத்தில் போர்ட்லேண்ட் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவைக்கப்பட்டன. இன்று நாடுகளுக்கு இடையேயும் கண்டங்களுக்கு இடையேயும் மின்சார விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கம்பியில்லாமலும் கைபேசிக்கு மின்னேற்றம் ( சார்ஜ் ) செய்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்புகள் ஒரு புதிய அறிவியல் யுகத்தை முன்னறிவிக்கின்றன.

No comments:

Post a Comment