Wednesday, 28 July 2021

இன்றைய நாள்

 உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.


உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


   மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை தருகிறது. இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை அழிவதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, 18 July 2021

 *'தமிழ்நாடு' என்று*

*பெயர் சூட்டப்பட்ட நாள்*

*இன்று - 18.7.1967.*


முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று. எழுச்சியூட்டும் இந்த நன்னாளில், நமது பண்டைய வரலாற்று நிகழ்வுகளை நினைவில் தாங்கி, தமிழகத்தின் உரிமைகளையும் தனிச்சிறப்புமிக்க விழுமியங்களையும் காக்கவும் மீட்கவும் உறுதியேற்போம்.


செம்மொழிப் பெருமையும் உலகின் மூத்த நாகரிகச் சிறப்பையும் கொண்ட தமிழ் நிலத்திற்கு, சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது; 1957-இல் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக நுழைந்தபோதே, இதுகுறித்துப் பேசி பதிவு செய்துள்ளது.


'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் அவர்கள், சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தது, தமிழகத்தின் அழியாத தியாக வரலாறு. 


அந்தத் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழ் நிலத்திற்கே உரித்தான பெருமைக்கு மகுடம் சூட்டும் முறையிலும், 1967-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் அதற்கான நடைமுறைகளை வகுத்தார்.


அதன் காரணமாக, 1967 ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில், சென்னை மாகாணத்தை "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உணர்ச்சிகரமான ஒருமித்த ஆதரவுடன், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டிய அறிஞர் அண்ணா அவர்கள், மூன்று முறை தமிழ்நாடு எனப் பேரவையில் தமது வெண்கலக் குரலில் எழுச்சி முரசம் கொட்ட, சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் "வாழ்க" என முழக்கமிட்டது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள சீர்மிகு வரலாறு. தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை 1967 நவம்பர் 23-ஆம் நாள் மத்திய அரசு ஏற்றதன் விளைவாக, இந்த மாநிலம் 'தமிழ்நாடு' எனப் பெயர் பெற்று விளங்குகிறது.

Monday, 12 July 2021

ஆழ்கடல் அனுபவம்

 நீங்கள் தொடு திரையை மேலே தள்ளும்போது  நீங்கள் கடலின் அடியில் ஆழமாக, ஆழமாக சென்று கொண்டே இருப்பீர்கள்... இது மிகவும் ஆச்சரியமாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.

கடலில் 10000 மீட்டர் ஆழத்திற்கு தள்ளுங்கள்...

https://neal.fun/deep-sea/

 தவறவிடாதீர்கள்.  சிறந்த ஆழ்கடல் உண்மையை உணரலாம். மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

Sunday, 11 July 2021

அறிவியல் நிகழ்வுகள்

 நினைவு கொள்ளும் அறிவியல் அறிஞர்கள் & அறிவியல் நிகழ்வுகள்

      11 ஜூலை 2021

----------------------------------------

1902- நெதர்லாந்தில் ஹேக் நகரில் சாம்யுல் ஆப்ரஹாம் கௌட்ஸ் மிட் என்ற இயற்பியலாளர் பிறந்தார். அமெரிக்காவில் குடியேறியவர். அணுக்கரு வட்டணையில் சுற்றி வரும் மின்னணுக்கள் தன்னைத் தானே சுழன்று கொள்கிறது என்பதைக் கண்டறிந்தவர். மன்ஹாட்டன் திட்டப்படி அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்.

****************************1811 இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் வில்லியம் இராபர்ட் குரோவ் பிறந்தார். மின்கலம் ஒன்றை உருவாக்கினார். பிளாட்டினம் மற்றும் துத்தநாகம் முதலிய மின்வாய்கள் கந்தக அமிலத்தில் வைக்கப்பட்டு அம்மின்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் எரிபொருள் மின்கலத்தையும் உருவாக்கினார்.

**************************

Saturday, 10 July 2021

புதிய பாடப்புத்தகங்கள் 2021_2022

 1st - 12th Standard Text Books New Edition Officially Released by TN Educational Department 2021 - 2022


      புதிய கல்வியாண்டு (2021 - 2022) தொடங்கி இருக்கும் காரணத்தினால் , புதிய கல்வி ஆண்டிற்கு தேவையான பாடப் புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள பயன்படும் மிக முக்கிய வளைதள இணைப்புகள் அனைத்தும் ஒரே தொகுப்பில் உள்ளது.  எனவே , அனைத்து மாணவ செல்வங்களுக்கும் வீட்டில் இருந்து படிப்பதற்கு உதவியாக இருக்கும். 


👉🏻 https://books.kalvikadal.in/2021/06/1-12th-standard-all-subjects-text-books.html


📘 1st STD - https://bit.ly/3pqZoEP


📘 2nd STD - https://bit.ly/3uXb8QA


📘 3rd STD - https://bit.ly/3poJlaA


📘 4th STD - https://bit.ly/3vWHwEz


📘 5th STD - https://bit.ly/3fXH3vW


📘 6th STD - https://bit.ly/3vYOE31


📘 7th STD - https://bit.ly/3fTLUhO


📘 8th STD - https://bit.ly/2RqXho2


📘 9th STD - https://bit.ly/3uWnoB0


📘 10th STD - https://bit.ly/34SkHWt


📘 11th STD EM - https://bit.ly/3uRnGZL


📘 11th STD TM - https://bit.ly/3uTSEQX


📘 12th STD TM - https://bit.ly/3uWVo0a


📘 12th STD EM - https://bit.ly/34Usdjz


Friday, 9 July 2021

அறிவியல் நிகழ்வுகள்

 நினைவு கொள்ளும் அறிவியல் அறிஞர்கள் @ அறிவியல் நிகழ்வுகள்

         09 ஜூலை 2021


1856- அமிடியோ அவோகாட்ரோ என்ற இத்தாலிய வேதியியலாளர் மறைந்தார். இலட்சிய வாயுவிற்கான விதியை உருவாக்கியவர். ஒரு மோல் வாயுவில் அடங்கியுள்ள மூலக்கூறு எண்ணிக்கையை  கணக்கிட்டு கூறியவர். இந்த எண் அவகோட்ரா எண் என அழைக்கப்படுகிறது.

**************************1911- அமெரிக்காவில் கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஜான் ஆர்க்கிபோல்ட் வீலெர் என்பவர் பிறந்தார். அணுக்கரு இயற்பியலிலும் ஒருங்கிணைந்த புலக்கோட்பாட்டிலும் அதிக அளவு பங்காற்றியவர். கருந்துளை என்ற பெயரை உருவாக்கியவரும் இவரே. பொது சார்பியல் கோட்பாட்டில் புவியீர்ப்பு தகர்வு குறித்து விவரித்தார்.

************************** 

1957- நோபெலியம் என்ற 102 வது தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் ஜியார்சோ என்பவர். இதன் அரை ஆயுள் காலம் 8.5 மெகா எ.வோ ஆகும். ஆனால் ஆய்வுகள் செய்தபோது அதன் எந்த ஐசோடோப்பின் அரை ஆயுள் காலமும் 3 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை எனக் கண்டறியப்பட்டது.

**************************

Tuesday, 6 July 2021

இன்றைய தினம்


*" தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ''-*

எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தன்னை நம்புதலாகும்.

ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தித் தள்ளி விடுகிறது அல்லவா.


அது போல மனித சக்தி நம்மில் நிறைந்திருந்து இருந்தால் தான் அது முன்னேற்றப் பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்.


சிறிதளவேணும் தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

இயற்கையிலே நாம் நம் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம்.


அது போதுமான அளவு சிலருக்கு இருப்பதில்லை. அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும்.


சிறிதளவே நம்பிக்கையை வைத்துக் கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம்.


முழுவதுமாக நிரம்பப் பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டு செல்லும்.


உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள்.


சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள்


அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள்.


எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள்.


இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும் போது உங்கள் மீது நம்பிக்கையும் அதிகரிக்கும்.


தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.


ஆழ் மனதின் வல்லமையைத் தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற செயல்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பது தான் இழிவு'


எனவே விழித்துக் கொள்ளுங்கள்.., 


வெற்றியை நோக்கி விரைந்திடுங்கள்.


சற்றும் தாமதிக்காதீர்கள் என்று ஆழ்மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.


உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள்.


*ஆம்.,நண்பர்களே..,*


*தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வையுங்கள்.*


*உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றிப் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.வெற்றிப் படிகளில் பயணியுங்கள்.*


*மற்றவர்களுக்கு சிறந்த முன் உதாரணி ஆக்குகுங்கள்.*

*இனி நாளை காலம் என்றும் நம்மோடு தான்..✍🏼🌹*

Sunday, 4 July 2021

இன்றைய தினம்

 இந்திய தேசிய கோடியை வடிவமைத்த பிங்கலி  வெங்கய்யா நினைவு தினம் -  ஜூலை 4,  1963:



பிங்கலி வெங்கைய்யா இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார். வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.


1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இந்திய சுதந்திர இயக்கத்தின் உறுப்பினர்களால் பல்வேறு தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 


காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின்பொழுது, மகாத்மா காந்தி பிங்கலி வெங்கைய்யா விடம் தனிக்கொடியை உருவாக்க அறிவுறுத்தினார். விசயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசிய கொடியை அறிமுகப் படுத்தினார். 


இவரது வடிவைமைப்பு முதலில் இந்திய தேசிய காங்கிரசுக்காக வடிவமைக்கப்பட்டது, பின்னர் 1947 இல் சில மாற்றங்களுடன் இந்திய தேசிய கோடியாக அங்கீகரிக்கப்பட்டது 

புவியியலாலராகவும், விவசாயியாகவும் இருந்த பிங்கலி வெங்கய்யா, மச்சிலிபட்டணத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்த கல்வியாளர் ஆவார். 


தேசிய கொடியை உருவாக்கிய இவர் அந்த அளவு பிரபலமாகவில்லை. இவர் 1963 ஆம் ஆண்டு தனது 86 வயதில் மறைந்தார். இவர் மறைந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு, இவரை நினைவுகூரும் வகையில் 2009இல் இவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

இன்றைய தினம்

 இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற மேரி க்யூரி மறைந்த தினம் சூலை 4


போலந்து தலைநகர் வார்சாவில் (1867) பிறந்தார். இயற்பெயர் மரியா சலோமியா ஸ்கோடோஸ்கா. பள்ளி ஆசிரியரான தந்தையிடம் கணிதம், இயற்பியல் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கினார்.


இவருக்கும், இவரது அக்காவுக்கும் மருத்துவம் படிக்க ஆசை. இவர் வேலை பார்த்து அக்காவைப் படிக்கவைப்பது, பிறகு அவர் வேலைக்குப் போய் இவரைப் படிக்கவைப்பது என்று உடன்படிக்கை செய்துகொண்டனர். அக்கா பாரீஸ் சென்றார். அவருக்கு உதவ ஒரு வீட்டில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தார் மேரி. 6 ஆண்டுகளாக அக்காவுக்கு பணம் அனுப்பினார்.


அக்காவின் அழைப்பை ஏற்று, பாரீஸ் சென்றார். அங்கு சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்றார். பகுதிநேர வேலைகள் பார்த்து சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்தினார்.


பியரி என்ற ஆராய்ச்சியாளரின் அறிமுகம் கிடைத்தது. இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இருவரும் வாழ்விலும் இணைந்தனர். எக்ஸ் கதிர்களை ஆராய்ந்துவந்த விஞ்ஞானி பெக்கரெல், அந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை மேரியிடம் ஒப்படைத்தார். தம்பதிகள் இணைந்து ஆராய்ச்சிகளில் இறங்கினர்.


யுரேனியம் விலை அதிகம் என்பதால், இவர்களால் வாங்க இயலவில்லை. ஆஸ்திரியாவில் யுரேனியத்தைப் பிரித்தெடுத்த பிறகு, எஞ்சியவற்றை குப்பையில் கொட்டுவதாக கேள்விப்பட்டனர். போக்குவரத்து செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து, அதை கொண்டுவந்தனர். டன் கணக்கில் குப்பை குவிந்தது.


உரிய கருவிகள், உபகரணங்கள் இவர்களிடம் கிடையாது. எளிமையாக மண்ணைக் கரைத்து, கொதிக்க வைத்து பக்குவம் செய்து, சளைக்காமல் ஆய்வு செய்தனர். யுரேனியக் கதிர் போல 300 மடங்கு ஆற்றல் கொண்ட கதிர்களைக் கண்டறிந்தனர்.


அந்த கதிர்கள் பட்டு இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையிலும் மேரி, ‘இது திசுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. எனவே நோய் விளைவிக்கும் திசுக்களையும் இதன்மூலம் அழிக்கலாம்’ என்பது தெரியவருவதாக கூறி மகிழ்ந்தார்.


தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். யுரேனியக் கழிவில் இருந்து பொலோனியம் தனிமத்தைக் கண்டறிந்தார். தொடர் ஆய்வுகளில் கிடைத்த சில படிகங்கள் ஆற்றல் மிக்க கதிர்களை தொடர்ந்து வீசின. இந்த கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக பெக்கரெல் மற்றும் க்யூரி தம்பதிக்கு 1903-ல் நோபல் பரிசு கிடைத்தது.


சாலை விபத்தில் கணவர் பியரி 1906-ல் இறந்தார். சிறிதுகாலம் சோகத்தில் இருந்த மேரி, பின்னர் உறுதியுடன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். கணவர் பார்த்த பேராசிரியர் பணியை பிரான்ஸ் அரசு இவருக்கு வழங்கியது. பாரீஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியை என்ற பெருமையைப் பெற்றார். ரேடியக் கூட்டுப் பொருளின் படிவங்களை பிரித்தெடுத்து, ரேடியம் தனிமத்தை தனியாகப் பிரித்தார். இதற்காக 1911-ல் 2-வது நோபல் பரிசைப் பெற்றார்.


கதிர்வீச்சால் தன் உறுப்புகள் பாதிக்கப்படுவதை அறிந்தார். ஆனாலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியத்தைக் கண்டறிந்த தன்னலமற்ற விஞ்ஞானி மேரி க்யூரி உடல்நலம் பாதிக்கப்பட்டு 67-வது வயதில் (1934) மறைந்தார்.