liveworksheets.com
Friday, 30 December 2022
Thursday, 29 December 2022
NMMS MAT UNIT TEST 4/2
liveworksheets.com
NMMS UNIT TEST 4/1
liveworksheets.com
NMMS MAT UNIT TEST 5/2
liveworksheets.com
NMMS MAT UNIT TEST 5/1
liveworksheets.com
NMMS MAT UNIT TEST 3
liveworksheets.com
Wednesday, 28 December 2022
அன்றாட வாழ்வில் விலங்குகள் 1 NMMS QUIZ
liveworksheets.com
அன்றாடவாழ்வில் வேதியியல் 1 NMMS QUIZ
liveworksheets.com
அண்டம் மற்றும் விண்வெளி 2
liveworksheets.com
அண்டம் மற்றும் விண்வெளி 1
liveworksheets.com
Monday, 26 December 2022
Sunday, 25 December 2022
இன்றைய தினம்
டிசம்பர் 25 ஐசக் நியூட்டன் பிறந்த நாள்
நாள். ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727) ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கியதுடன், முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.
திருக்குறளின் சிறப்புகள்
📖 *திருக்குறளின் சிறப்புகள்:-* 📖
*1.* 👉 *திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை*
*2.* 👉🏾 *திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812*
*3.* 👉 *திருக்குறளின் முதல் பெயர் ~ முப்பால்*
*4.* 👉🏾 *திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133*
*5.* 👉 *அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள்,*
*6.* 👉🏾 *பொருட்பாலில் 70 அதிகாரங்கள்*
*7.* 👉 *காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.*
*8.* 👉🏾 *திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் ~ 1330*
*9.* 👉 *திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380*
*10.* 👉🏾 *திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700*
*11.* 👉 *திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250*
*12.* 👉🏾 *திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்:*
👉 குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71)
👉 குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)
*13.* 👉🏾 *திருக்குறள் அ கரத்தில் தொடங்கி ன கரத்தில் முடிகிறது*
*14.* 👉 *ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது*
*15.* 👉 *திருக்குறளில் உள்ள சொற்கள் ~ 14,000*
*16.* 👉🏾 *திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194*
*17.* 👉 *திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247_இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை*
*18.* 👉🏾 *திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்*
*19.* 👉 *திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை*
*20.* 👉🏾 *திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்*
*21.* 👉 *திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி*
*22.* 👉🏾 *திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள*
*23.* 👉 *திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.*
*24.* 👉🏾 *திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து – னி*
*25.* 👉 *திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை*
*26.* 👉🏾 துறவு: குறள் எண்: 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
*27.* 👉 *திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ, ங*
*28.* 👉🏾 *திருக்குறளில் நேரடியாக இடம்பெறாத சொல்- கடவுள்*
*29.* 👉 *திருக்குறளில் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.*
*30.* 👉🏾 *திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.*
*31.* 👉 *திருக்குறள் எண் 411_யில் ஐந்து முறை செல்வம் என்கிற சொல் வருகிறது.*
_செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்_
செல்வத்துள் எல்லாம் தலை
*32.* 👉 *திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்*
*33.* 👉🏾 *திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்*
*34.* 👉 *திருக்குறளை உரையாசிரியர்களுள் 10_வது உரையாசிரியர் - பரிமேலழகர்*
*35.* 👉🏾 *திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.*
*36.* 👉 *திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி யு, போப்*
*37.* 👉🏾 *திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.*
*38.* 👉 *திருக்குறளில் இடம்பெறாத இரு எண்கள்- ஏழு மற்றும் ஒன்பது*
*39.* 👉🏾 *திருக்குறள் அதிகமான மொழிகளில் வெளிவந்துள்ளது*
*40.* 👉 *திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியில் எழுதியவர் கிட்டு சிரோன்மணி.*
*41.* 👉🏾 *நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.*
*42.* 👉 *திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்*
*43.* 👉🏾 *குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.*
*44.* 👉 *வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.*
*45.* 👉🏾 *வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.*
*46.* 👉 *திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.*
*47.* 👉🏾 *திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.*
*48.* 👉 *திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்.*
*49.* 👉🏾 *திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.*
*50.* 👉 *சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.*
*51.* 👉🏾 *திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.*
*52.* 👉 *திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.*
Friday, 23 December 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2022
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்
குறள் : 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பொருள்:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
பழமொழி :
A true friend is the best possession
உண்மையான நண்பனே உன்னதச் சொத்து
இரண்டொழுக்க பண்புகள் :
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
பொன்மொழி :
ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் படி அது இருப்பதை அடையாளம் காணுவதாகும். --ஜிக் ஜிக்லர்.
பொது அறிவு :
1. மிகப்பெரிய நீர் பறவை எது ?
அன்னம்.
2. பின்னோக்கி பறக்கும் பறவை எது?
ஹம்மிங் பறவை.
English words & meanings :
flea - a biting insect. noun. உண்ணி பூச்சி. பெயர்ச் சொல். flee - run away, verb ஓடிப் போதல். வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தச் செய்யும்.
NMMS Q
0.5,. 0.55, 0.65, 0.80, _______.
a) 0.82 b) 0.9 c) 0.95 d) 1
விடை: 1
நீதிக்கதை
உருவத்தை பார்த்து பழகாதே
ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.
அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...
ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.
உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.
மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன
இன்றைய செய்திகள்
23.12.22
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், இதனை ஜன.2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
* காப்புக் காடுகளுக்கு அருகில் செயல்படும் குவாரிகள் மூடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்தார்.
* சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
* நாகையில் இருந்து 600 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டிச.25, 26-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* சீனாவில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
* 1.11 லட்சம் சைபர் கிரைம் வழக்கில் ரூ.188 கோடி மீட்பு: மத்திய அமைச்சர் தகவல்.
* ஆப்கன் பல்கலை.களில் பெண்கள் படிக்க தடை: தலிபான் உத்தரவுக்கு ஐ.நா. எதிர்ப்பு.
* எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
* சென்னை பல்கலைக்கழக தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீராங்கனை ஷெரின் தங்கம் வென்றார்.
* பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
* இந்தியாவில் முதன்முறையாக உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடரை நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
Today's Headlines
* On the occasion of the Pongal festival, the Tamil Nadu government has announced that Rs.1000 Pongal gift will be given to rice family card holders and this will be inaugurated by Chief Minister Stalin on January 2.
* Environment Minister Siva V Meiyanathan said that quarries operating near reserve forests will be closed.
* The consultation for Siddha, Ayurveda, Unani, and Homeopathy courses will start on 27th in Chennai.
* Depression 600 km from Nagai: Chance of heavy rain in delta districts on Dec 25, 26.
* A mutated Omicron virus that is spreading rapidly in China has been confirmed in 4 people in India. Accordingly, intensive inspection has been ordered at international airports.
* 1.11 lakh cybercrime case recovery of Rs 188 crore: Union Minister informs.
* Ban on women studying in Afghan universities: Taliban orders UN Resistance.
* Tedros Adhanom Ghebreyesus, the head of the World Health Organization, said that the unexpected increase in the spread of corona in China is worrying.
* Chennai University Athletics: Loyola College's Sherin wins gold in women's 100m.
* The 7th 20-over cricket tournament for school teams will start on 26th in Tamil Nadu.
* For the first time India has been given permission to host the World Table Tennis Tournament.
Covai women
Thursday, 22 December 2022
STD 7, TERM 3 - 1. புதிய சமயக் கருத்துக்களும் இயக்...
Wednesday, 21 December 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2022
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்.
அதிகாரம்:இனியவை கூறல்
குறள்:93
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான்
ஆம் இன்சொ லினதே அறம்.
பொருள்:
கண்டவுடன் முகமலர்ச்சியுடன் பார்த்து பேசி, உள்ளன்புடன் பழகுவதே நல்லறமாகும்.
பழமொழி :
Many hands make light work.
பல கரங்கள் பணியை இலகுவாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
பொன்மொழி :
நீங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போதே அதை தீர்க்கத் தொடங்குகிறீர்கள்.
--ரூடி கியுலியானி.
பொது அறிவு :
1. மருத்துவத்தில் மிகவும் பயன்படும் ஓர் இந்திய தாவரம் எது?
வேம்பு .
2. பாலை தயிராக்கும் பாக்டீரியா எது?
லாக்டோ பாஸிலஸ்.
English words & meanings :
feet - plural of feet. noun.பாதங்கள். பெயர்ச் சொல். feat - achievement. noun அருஞ்செயல். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொய்யா இலைகள் நம்முடைய செரிமான அமைப்பில் உள்ள தேவையற்ற, உடலுக்குத் தீமை செய்யும் நுண்ணுயிரிகளை கொல்லும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கின்றன.
இது குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும். அதனால் மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அமிலத்தன்மை சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும்.
NMMS Q
கொடுக்கப்பட்ட நான்கு வார்த்தைகளில் தொடர்பற்றதாக அமையும் வார்த்தை: a) talking b)speaking c)smelling. d)crying விடை: smelling
டிசம்பர் 21
ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்
எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு: பிறப்பு: :திசம்பர் 21, 1972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
நீதிக்கதை
இனிப்பைத் தின்ற எறும்பு
அவலூரில் கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப் பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான்.
இந்த வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமற்றி வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.
மதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான்.
அந்தக் கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்? என்று கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர்.
குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார்.
அவர் சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியாக இருந்தனர் சிறுவர்கள்.
எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன்.
தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.
சதீஷ் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதிற்கள்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார்.
அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.
இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது, என்று கத்தினான்.
தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ் அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன்.
தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா? என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக் கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான்.
இதைக் கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான்.
தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான்.
நீதி :
பிறரை ஏமாற்றுதல் கூடாது.
இன்றைய செய்திகள்
21.12.22
* தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
* “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
* தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
* பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் ஒரு கி.மீ.க்கு கல்குவாரி, சுரங்கம் செயல்படலாம் - தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை.
* வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் காலை வேளைகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
* பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும் - வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்.
* சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் தீவிரமாகி இருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
* கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து.
* 'சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு.
Today's Headlines
* The Government of Tamil Nadu has set up a high-level committee to provide 4% reservation for differently-abled persons in the promotion of Tamil Nadu government jobs.
* Tamil Nadu Power Minister Senthil Balaji said that after the completion of the installation of smart meters, the amount of electricity will be calculated every month.
* The Madurai branch of the Madras High Court has directed the Tamil Nadu government to take necessary steps for the development of the Tamil language.
* Quarrying and mining can be carried out per km in the protected forest area - Tamil Nadu Government Ordinance lifting the ban.
* Due to heavy snowfall in the northern states, people are facing a lot of difficulties in the mornings.
* 10 Crore Passport Holders - Ministry of External Affairs Information
* The United States has said that the spread of the Coronavirus in China has made the world concerned.
* England won the series completely by defeating Pakistan in the last Test.
* 'I will continue to play in international football matches' - Argentina captain Messi announced.
Covai women
Tuesday, 20 December 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.12.2022
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்
குறள் : 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
பொருள்:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால் மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
பழமொழி :
Spend as you get.
வரவுக்கேற்ற செலவு செய்
இரண்டொழுக்க பண்புகள் :
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
பொன்மொழி :
மழையின் போது அனைத்து பறவைகளும் மறைவிடத்தைத் தேடுகின்றன. ஆனால் கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதன் மூலம் மழையைத் தவிர்க்கிறது. சிக்கல்கள் பொதுவானவை தான், ஆனால் அணுகுமுறை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. --ஏ. பி. ஜே. அப்துல் கலாம்.
பொது அறிவு :
1. ஆப்பிரிக்கா காந்தி என அழைக்கப்படுபவர் யார்?
கென்னத் கௌண்டர்.
2. மைசூர் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்?
திப்பு சுல்தான்.
English words & meanings :
fair - just, impartial, adjective and adverb, நியாயமான, பெயரடை, வினையுறிச் சொல். fair - money for journey. noun. பயணக் கட்டணம். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்களில் ஒன்று கொய்யா பழம். அதில் கலோரிகளும் மிக குறைவு.
ஒரு மீடியம் சைஸ் கொய்யாப் பழத்தில் வெறும் 37 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.
NMMS Q
கொடுக்கப்பட்ட நான்கு எண்களில் தொடர்பற்ற எண்:
a) 25. b) 81. c) 196. d)256.
விடை: 81
நீதிக்கதை
மனதில் எழும் குறை
வடுகபட்டி என்ற ஊரில் சந்தோஷம் என்ற இளைஞன் இருந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. பின் நகரத்தில் வேலையும் கிடைத்தது. தன் மனைவியுடன் நகரத்தில் தங்கி வேலை பார்த்தான்.
வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தான். எல்லோரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை! என்று குறை சொன்னாள் மனைவி.
நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும் என்றான் அவன். அடுத்த நாள் அவன் வேலை முடித்து விட்டு வந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர் என்றாள் அவள்.
இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள், என்றாள். அச்சமையம் அவனுக்கு பெற்றோர்களிடம் இருந்து ஒரு மடல் வந்தது. அதில், ஒரு வாரம் நடக்கும் ஊர்த் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்று எழுதி இருந்தது.
மனைவியிடம் அந்த மடலைக் காட்டி, எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை இருப்பதால் என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா! என்றான். அவளும் அவன் சொன்னதைக் கேட்டு ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள்.
பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா? என்று கேட்டான் அவன். அங்கே மாடு மேய்க்கும் வேலனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்! என்றாள் அவள்.
யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும், தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைத்துக்கொண்டு, அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் இருக்கிறது. இவளின் குணத்தை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தான் சந்தோஷம்.
நீதி :
எப்போதும் நல்லதையே நினைத்தல் வேண்டும்.
இன்றைய செய்திகள்
20.12.22
* கடலூர் மாவட்டத்தில் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு.
* சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
* வானிலை முன்னறிவிப்பு: டிச.23-ல் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* ரயில்களில் அனுப்பும் பார்சல்களை தபால்காரர் மூலம் விநியோகிக்கும் புதிய திட்டம்: மதுரை, கோவை கோட்டத்தில் விரைவில் அமல்.
* டெல்லியில் மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்: ஒரு லட்சம் பேர் பங்கேற்பு.
* 7,000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை சீனாவுக்கான எச்சரிக்கை.
* கடந்த 5 ஆண்டுகளில் மத்திய ஆயுதப்படைகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்ப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்.
* கரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு: தகவல்களை மூடி மறைக்கிறது சீனா.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி.
* நேசன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி 'சாம்பியன்'.
* உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து.
Today's Headlines
* Ordinance issued: Joint drinking water scheme to benefit 1.28 lakh people in Cuddalore district.
* The Tamil Nadu Chief Minister launched the 'Namma School Foundation project on behalf of the School Education Department in Chennai.
* Weather forecast: Heavy rain likely in 6 districts of Tamil Nadu on Dec 23.
* New scheme for delivery of parcels sent by trains by postmen: Soon to be implemented in Madurai, Coimbatore.
* Farmers strike resumes in Delhi: One lakh people participated
* The Agni-5 cruise missile which attacked 7,000 km was tested and is a warning to China.
* Over 1 Lakh Soldiers Inducted into Central Armed Forces in Last 5 Years: Union Home Ministry Information
* Corona death toll rises: China hides information
* The Indian team has advanced to the 2nd position in the World Test Championship rankings.
* Nations Cup Hockey: Indian Women's Team won the Championship.
* World Cup Football: Golden Boot for Mbappe, Golden Ball for Messi
Covai women
Monday, 19 December 2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2022
திருக்குறள் :
குறள் : 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
பொருள்:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
பழமொழி :
பிணைக்கப்படுவதன் மூலம் வலிமை வலுவடைகிறது.
ஒரு சேரக் கட்டினால் ஒன்பது யானை பலம்.
இரண்டொழுக்க பண்புகள்:
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தாலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
பொன்மொழி :
பிரச்சினைகள் இல்லாவிட்டால், நம்மில் பெரும்பாலானோர் வேலையற்றவர்களாக இருப்போம். --ஜிக் ஜிக்லர்
பொது அறிவு :
1. மிகவும் கனமான மூளை உள்ள விலங்கு எது ?
திமிங்கலம் .
2. பாலில் காணப்படும் சர்க்கரையின் பெயர் என்ன ?
லாக்டோஸ்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
இனிப்புச் சுவை அதிகம் கொண்ட கொய்யா பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஏ, ஆக்சிஜனேற்றங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதேபோல கொய்யாவின் இலைகளிலும் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. இவை கொலஸ்ட்ராலைக் குறைப்பது முதல் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது வரை ஏராளமான பயன்களை கொண்டது.
NMMS Q
நீதிக்கதை
இன்றைய செய்திகள்

.png)