Monday, 12 October 2020

இன்றைய சிந்தனை

 🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹


இன்றைய சிந்தனை 


(12.10.2020)

…………………………………………….


விட்டுக் கொடுப்போம்...!

..........................................


இக்காலச் சமுதாயம். பொதுவாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றி விடும்...


நண்பர்களாக இருந்தாலும் ,கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலொழிய அவ்வாழ்வு சிறப்பாக அமையாது...


எப்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்...? ஒருவர் மேல் அன்பு பெருகும் போது தான் என்று கூறத் தேவையில்லை...


ஒருவர் மேல் அதிகமான அன்பு கொள்ளும் காரணமாகத் தானே அவர் செய்தது, நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக் கொடுக்கிறோம்...!


அப்படிப்பட்ட அன்புடன் நிலைத்திருக்க நாம் விட்டுக் கொடுத்து வாழ்தல் இன்பம் பயக்கும்.  உறவு பெருகும்..  நன்மை பயக்கும்...


நல்லவை கெட்டவை பரிமாற்றம் நிகழும். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது குறித்துத் தெளிவான பார்வை கிடைக்கும்...


இயன்றவரை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப் போவதில்லை. விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அன்புடனே விட்டுக் கொடுக்க வேண்டும். பிடிவாதம் கூடாது...


எந்த நிகழ்வுகளையும், சிக்கல்களையும் மென்மையாகக் கையாளுங்கள். சில நேரங்களில் சில வருத்தங்களையும் பொறுத்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்...


அனைவருக்கும் தெரிந்த கதை தான், வாசியுங்கள்...


அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது...


ஒருநாள் அந்தப் பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்தன...


ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன...


அந்தப் பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தைக் கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன...


முதலாவது ஆடு, "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விட வேண்டும்" என்றது...


இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமானம் இன்றி ஆற்றில் விழுந்தன...


ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள்

செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன...


இரண்டு ஆடுகளுமே ''விட்டுக் கொடுக்கும்'' எண்ணம் இல்லாததால் அவைகள் தங்கள் பிடிவாதத்தால் மரணித்தன...


ஆம் நண்பர்களே...!


வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார்- மருமகள் உறவிலாகட்டும், கணவன்- மனைவி உறவாகட்டும் இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்தப் பிடிவாத குணமே காரணம்...!


நண்பர்கள் இடையே பிரிவு வருவதும் இந்த எண்ணதினால் தான். இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க, நம்முள் ஏன் இந்தப்  பிடிவாத குணம்...?


விட்டுக் கொடுத்தால் வேதனை இல்லை. வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது. விட்டுக் கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை. அடைவது தான் அதிகம்...!!


விட்டுக் கொடுப்பதால் நம் உறவை வலிமைப் படுத்துகிறோம், நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம். பகைமையை விரட்டுகிறோம். விட்டுக் கொடுத்தலில் விவேகம் உண்டு. வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு...!!!


🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹

 எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி

🚣 கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை (gyrocompass) கண்டறிந்த எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.


🚣 இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.


🚣 அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1930ஆம் ஆண்டு நியூயார்க்கில் மறைந்தார்.

 உலக ஆர்த்ரிடிஸ் தினம்

👉 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


👉 இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.


👉 நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.

 இந்தியப் பறவையியல் பிதாமகன் டி.சி.ஜெர்டான் பிறந்த தினம் - அக்டோபர் 12:


தாமஸ் கேவர்ஹில் ஜெர்டான் இங்கிலாந்தின் டெர்ஹாம் கவுண்டியில் 1811-ல் அக்டோபர் 12 அன்று பிறந்தார். மருத்துவம் பயின்ற அவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அறுவைசிகிச்சை மருத்துவராக (துணை சர்ஜன்) இந்தியாவுக்கு 1836-ல் வந்தார்.

சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதும் தாவரங்கள் மீதும் ஆர்வம் மிகுந்தவர் ஜெர்டான். இந்தியாவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை (specimen) சேகரிக்க ஆரம்பித்தார். தக்காணப் பீடபூமி பகுதியிலும் கிழக்கு மலைத் தொடரிலும் அவர் பணிபுரிந்தார். 


ஏன் இந்த மாற்றம்?

பறவைகள், தாவரங்கள் மட்டுமன்றிப் பூச்சிகள், ஊர்வன, நீர்நில வாழ்விகள், பாலூட்டிகள் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஆரம்பத்தில் தான் சேகரித்த பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களைச் சரியாக அடையாளம் காண்பதற்காக ஸ்காட்லாந்தில் உள்ள பறவையியலாளர் வில்லியம் ஜார்டைனுக்கு, ஜெர்டான் அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக அவரிடம் போய்ச்சேர்வதற்கு முன்பாகவே, அந்தப் பதப்படுத்தப்பட்ட பறவைகளைப் பூச்சிகள் அரித்துவிட்டன.


அதற்குப் பிறகு இனி வேறு யாரையும் நம்பிப் பிரயோஜனமில்லை என்று, தான் சேகரிக்கும் பதப்படுத்தப்பட்ட உயிரினங்களையும், தான் பார்த்ததையும் ஜெர்டான் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். இப்படியாக, தான் சேகரித்த குறிப்புகளைக்கொண்டு ‘கேட்டலாக் ஆஃப் த பேர்ட்ஸ் ஆஃப் த இண்டியன் பெனின்சுலா’ (1839-1840) என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலில் 420 பறவைகள் விவரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னதாக டபிள்யூ.எச். ஸைக்ஸ் என்பவர் 1830-களில் வெளியிட்ட புத்தகத்தைவிட, ஜெர்டான் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம்.


முன்னோடிப் புத்தகம்:

1862-ல் பணி ஓய்வு பெற்று ஜெர்டான் இங்கிலாந்துக்குச் சென்றார். அப்போது இரண்டு தொகுதிகளாக வெளியானதுதான் ‘தி பேர்ட்ஸ் ஆஃப் இந்தியா’ (1862-1864) என்ற புத்தகம். இந்தியாவில் அதற்குப் பிறகு வெளியான பறவைகள் புத்தகத்துக்கெல்லாம் அதுதான் முன்னோடி.


ஜெர்டானின் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு புத்தகம் ‘இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆஃப் இந்தியன் ஆர்னிதாலஜி’ 1847-ல் இது வெளியிடப்பட்ட இடம் அன்றைய மதராஸ் (சென்னை) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கும் அவருக்கும் இப்படி ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் 47 வேறுபட்ட பறவைகளின் 50 ஓவியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பறவைகளுள் மூன்று இமயமலைப் பறவைகள், ஒன்று இலங்கையைச் சேர்ந்தது. மற்றவையெல்லாம் இந்தியாவுக்குள் காணப்படும் பறவைகள். இதில் பெரும்பாலான பறவைகள் முதன்முறையாக இடம்பெற்றிருந்தது புத்தகத்தை முக்கியமாக்குகிறது.

இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின்படி பார்த்தால், இந்தப் புத்தகம் பல காலமாகத் தயாரிப்பில் இருந்திருப்பது தெரிகிறது. 


உள்ளூர் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களைத் துல்லியத்தின் அடிப்படையில் சரிபார்த்த பிறகு, இந்தப் புத்தகத்தில் ஜெர்டான் சேர்த்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு இணையாக அந்தப் பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும் ஜெர்டான் எழுதியிருக்கிறார். (இந்தப் புத்தகத்திலிருந்து சில ஓவியங்கள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.) ஜெர்டானின் மற்றப் புத்தகங்கள்: ‘த கேம்பேர்ட்ஸ் அண்டு வைல்டுஃபௌல் ஆஃப் இந்தியா’ (1864), ‘த மேமல்ஸ் ஆஃப் இந்தியா’ (1867).


இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின்படி பார்த்தால், இந்தப் புத்தகம் பல காலமாகத் தயாரிப்பில் இருந்திருப்பது தெரிகிறது. உள்ளூர் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களைத் துல்லியத்தின் அடிப்படையில் சரிபார்த்த பிறகு, இந்தப் புத்தகத்தில் ஜெர்டான் சேர்த்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு இணையாக அந்தப் பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும் ஜெர்டான் எழுதியிருக்கிறார். (இந்தப் புத்தகத்திலிருந்து சில ஓவியங்கள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.) ஜெர்டானின் மற்றப் புத்தகங்கள்: ‘த கேம்பேர்ட்ஸ் அண்டு வைல்டுஃபௌல் ஆஃப் இந்தியா’ (1864), ‘த மேமல்ஸ் ஆஃப் இந்தியா’ (1867).


அரிய பறவைகளின் அடையாளம்

இங்கிலாந்தின் நார்வுட்டில் ஜூன் 12 1872-ல் ஜெர்டான் மரணமடைந்தார். இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் இறந்திருந்தாலும் அவரது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. தனது ஆர்வத்தாலும் அறிவாலும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெர்டான். அவரால் முதன்முதலாக விளக்கப்பட்ட ஒரு பறவைக்கு அவருடைய நினைவாக ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரை வைத்தார்கள். உலகின் அரிதான பறவைகளுள் ஒன்று அது. 1900-ல் இறுதியாகப் பார்க்கப்பட்ட அந்தப் பறவை அழிந்துபோய்விட்டது என்று கருதப்பட்டு, பிறகு 1986-ல்தான் மறுபடியும் பார்க்கப்பட்டது.


இங்கிலாந்தின் நார்வுட்டில் ஜூன் 12 1872-ல் ஜெர்டான் மரணமடைந்தார். இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் இறந்திருந்தாலும் அவரது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. தனது ஆர்வத்தாலும் அறிவாலும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெர்டான். அவரால் முதன்முதலாக விளக்கப்பட்ட ஒரு பறவைக்கு அவருடைய நினைவாக ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரை வைத்தார்கள். உலகின் அரிதான பறவைகளுள் ஒன்று அது. 1900-ல் இறுதியாகப் பார்க்கப்பட்ட அந்தப் பறவை அழிந்துபோய்விட்டது என்று கருதப்பட்டு, பிறகு 1986-ல்தான் மறுபடியும் பார்க்கப்பட்டது.


தற்போது ஆந்திராவில் எஞ்சியிருக்கும் அந்தப் பறவைக்கு ‘கலுவிக்கோடி’ என்ற தெலுங்கு பெயர் இருந்தாலும் ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரே இயற்கையியலாளர்கள் மத்தியில் நிலைத்துவிட்டது. அதற்கு டி.சி. ஜெர்டான் மீது உள்ள அன்பும்கூட ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம். ஜெர்டானின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்ட இன்னொரு பறவையான ஜெர்டான்ஸ் பேப்ளரும் (தவிட்டுக்குருவி வகை) ஐம்பது ஆண்டுகளாகப் பார்க்கப்படாமல், இந்த ஆண்டு மீண்டும் பார்க்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அரியனவற்றின் அடையாளம்தானோ ஜெர்டான்?

Sunday, 30 August 2020

 ரூதர்ஃபோர்டு

💥 நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நியூசிலாந்தில் பிறந்தார்.


💥 இவர் யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் இல்லாமல் 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு ஆல்பா,  பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். இவர் மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.


💥 இவர் வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.


💥 கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு 1908ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு 1914ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நைட் (knight) விருது வழங்கப்பட்டது.


💥 அணுக்கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் தான் அணுக் கட்டமைப்பு குறித்த இன்றைய கோட்பாடுகள் அனைத்திற்கும் அடித்தளமாக விளங்குகின்றன. 'அணுக்கரு இயற்பியலின் தந்தை" என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1937ஆம் ஆண்டு மறைந்தார்.

புதிய பார்வை

 

 புதிய பார்வை


நின்று 

நிதானித்து 

யோசிக்க 

மக்களுக்கு

நேரமில்லை. 


எல்லோரும் 

ஓடிக்கொண்டே

இருக்கிறார்கள்.


எங்கே 

ஓடுகிறோம் 

என்பதை அவர்கள் 

அறிந்திருக்கவில்லை. 


ஏன் 

ஓடுகிறோம் 

என்பதும் 

அவர்களுக்கு

தெரியாது. 


மற்றவர்கள் 

ஓடுவதை

பார்த்து

இவர்களும் 

ஓடுகிறார்கள்.


பதவி 

வேட்டையை 

மேற்கொண்டு 

ஓடுகிறார்கள். 


பணத்தை

துரத்தியபடி 

ஓடுகிறார்கள். 


மற்றவர்களுக்கு 

தேவையானவை 

எல்லாம் 

தங்களுக்கும் 

தேவை என்று...

 

ஒருவரை

ஒருவர் 

முட்டிகொண்டு

ஓடுகிறார்கள்.


தனி

தன்மையை

இழந்து...


' கார்பன் '

பிரதிகள் போல் 

செயல்படுகிறார்கள்.


இப்படி 

ஓடுவதன் 

பெயர் வாழ்க்கை 

இல்லை.


இந்த 

இடைவிடாத 

பரபரப்பு...


ஒருவகையான 

நோய் மட்டுமே 

ஆகும்.


- ஓஷோ -


பணமோ

பதவியோ

சொத்தோ

மட்டுமே...


நம் 

வாழ்க்கையில்

முக்கியம்

இல்லை.


அதையும்

தாண்டி

ஒன்றுள்ளது. 


அது...


அது...


எந்த 

நிலையிலும்

நம் மனதை நாம்

மகிழ்ச்சியாக

வைத்து 

கொள்வதுதான்.


' போதும் 

  எனும் மனமே 

  பொன் செய்யும் 

  மருந்து '


என்னும்

முதுமொழிக்கு ஏற்ப...


நம்

மனதை

நாம் பழக்க

படுத்தி கொண்டால்...


இனி

எல்லாம் சுகமே.


வாங்க...


முயற்சிகள்

செய்யலாம்.



Saturday, 29 August 2020

 

Phonic drill for young learners/late bloomers

 

இசைஞானி இளையராஜாவின் வரிகளுடன் இசை கோர்த்து கல்வி தொலைக்காட்சி பாடல்

அறிவோம் தெளிவோம்

 *மோட்டார் சைக்கிளில் உள்ள சக்கரங்களில் ஆரைக் கம்பிகள் (spokes) இருப்பதும் ஸ்கூட்டர் சக்கரங்களில் அவை இல்லாமல் இருப்பதும் ஏன் ?*


மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றின் சக்கரங்களில் ஒன்றில் ஆரைக்கம்பிகள் இருப்பதற்கும் மற்றவற்றில் அவை இல்லாமல் இருப்பதற்கும் பெரிய அறிவியல் காரணம் ஏதுமில்லை.


 மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள், ஸ்கூட்டர் சக்கரங்களை விட அளவில் அதாவது விட்டத்தில் பெரியவை; எனவே மோட்டார் சைக்கிளின் சக்கரங்களைக் கம்பிகளின்றி திண்ணிய (solid) பொருளாக அமைத்தால் எடை மிகுதியாகி அவற்றை விரைந்து செலுத்துவதற்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும். மாறாக ஸ்கூட்டர் சக்கரங்கள் சிறியவை; எனவே முழுமையான திண்ம நிலையிலும் அவற்றின் எடை மிகுதியாவதில்லை. அதே நேரத்தில் கம்பிகளுடன் கூடிய சக்கரங்கள் விபத்து அல்லது வேறு காரணங்களால் எளிதில் தமது சீரான வட்ட வடிவத்தை இழந்து விடும் வாய்ப்பு உண்டு.


 எனவே எடை மிகுதி என்ற ஒரு குறையைத் தவிர்த்துப் பார்த்தால் கம்பிகளின்றி ஒரே திண்மத் தன்மையுடன் கூடிய சக்கரங்களைப் பயன் படுத்துவது சிறந்தது எனலாம். 


தற்போது பந்தைய மோட்டார் சைக்கிள்களில் கார்பன் இழைக்கலவையுடன் கூடிய பொருளைக் கொண்டு செய்யப்பட்ட, எடை குறைந்த, ஆரைக்கம்பிகளற்ற, திண்மமான பெரிய சக்கரங்களைப் பயன் படுத்துவதைக் காணலாம்.

    -

      

இன்றைய சிந்தனை

 

*-இன்றைய சிந்தனை.*.
(29.08.20..)             .                                                                     *பொய் பேசி சாதித்த செயல்களில் வெற்றி நிலைப்பது இல்லை*

உண்மையின் மூலம் கிடைக்கும் வெற்றி தள்ளிப் போனாலும் அவைகள் நிரந்தரமானவை.

பொய் பேசும் போது அதற்கான தண்டனையும் அப்போதே, அதுவும் அவர்களாலே விதிக்கப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

அத்தகைய மிகப் பெரிய தண்டனை அவர்கள் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை என்பதே..
*ஆம்..நண்பர்களே.*-
*பொய் நீண்ட காலம் வாழ்ந்ததும் இல்லை. உண்மை எந்த காலத்திலும் வீழ்ந்ததும் இல்லை.*

Friday, 28 August 2020

அறிவோம் தெளிவோம்

 பனிக்கரடி



பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பா லும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம். இந்நிலையில் பனிக்கரடிகளுக்கே உரித்தான  வினோத  வழக்கம் ஒன்று உள்ளது.

பொதுவாக பனிக்கரடிகள் உறைபனி வருவதற்கு முந்தைய மாதங்களில், அளவுக்கு அதிகமாக இரைகளை உண்டு கொழுத்து விடுகின்றன. கடுமையாக பனி கொட்ட ஆரம்பித்ததும் தங்களின் குகைகளுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன. இந்த நிகழ்வை ‘ஹைபர்னேஷன்’ என அழைக்கிறோம்.

குகைக்குள்ளேயே நீண்ட உறக்கம், அசைவில்லாமல் படுத்திருப்பது என்று நான்கு மாதங் களைக் கழித்து, இளைத்துப் போய் வெளியே வரும். அந்த நான்கு மாதங்களில், உயிர் வாழ அது, உடலில் உள்ள மிகையான கொழுப்பை பயன்படுத்திக் கொள்ளும்.

 பனிக் கரடி தசைகளுக்கு வேலை கொடுக்காமல் பல மாதங்கள் இருந்தாலும், தசைகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவே இருக்கும்.     R.S.K.  curie-yasity

புதிய பார்வை

  புதிய பார்வை  


எந்த ஒரு 

செயலையும் 

தொடங்கலாமா

தொடரலாமா

என்பதில்...


சிந்தனை

நீளமாக

இருக்கலாம்.


ஆனால்

ஒரு முடிவு

எடுத்த பின்னர்...


முயன்று

முன்னேற

முயற்சிகள்

செய்பவர்கள்...


வெற்றி

பெறுகிறார்கள்.


அதில்

மகிழ்ச்சியும்

அடைகிறார்கள்.


'  பாதை

   வகுத்தபின்பு

   பயந்தென்ன

   லாபம்...


   அதில்

   பயணம்

   தொடங்கி விடு

   மறைந்திடும்

   பாவம் '


வாங்க...


நமக்கான

பாதையை

காணலாம்.


பயணத்தை

தொடங்கலாம்.


வெற்றியை

ருசிக்கலாம்.


வாழ்க்கையை

ரசிக்கலாம்.



Thursday, 27 August 2020


 அந்துவான் இலவாசியே..!


அந்துவான் இலவாசியே 

(Antoine-Laurent de Lavoisier)

  ஒரு பிரான்சிய வேதியலாளர். தற்கால வேதியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர். ஆக்சிசனைக் கண்டறிந்தவர்;


தவறான கொள்கைகள் காரணமாக பின்தங்கிய நிலையிலிருந்த வேதியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் அந்துவான் இலவாசியே முக்கியமான ஒருவராவார்.


வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கியவர்; மெட்ரிக் முறை எனப்படும் அளவீட்டு முறையை உருவாக்க உதவியவர்; கந்தகம் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கூட்டுப்பொருளல்ல தனிமமே என மெய்ப்பித்தவர்


ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வளிமங்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவியவர். 


மனிதனும் விலங்குகளும் தாங்கள் மூச்சுவிடும் உயிர் வளியைக் கொண்டு, உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று இலவாசியே கண்டறிந்து கூறினார். 


பொருள்களின் நிறை குறையாப் பண்பினைக் (Conservation of Matter) கண்டறிந்தவர் 1794 ஆம் ஆண்டு நடந்த பிரான்சியப் புரட்சியின் போது புரட்சியாளர் என்று குற்றஞ்சாட்டிக் கிளெட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்டார் இந்த மிகச்சிறந்த அறிவியல் மேதை.


லாவோசியர் பிறந்தநாள் இன்று

(26 ஆகஸ்ட், 1743)



 சுழற்சியலைவியைக் கண்டறிந்ததற்காக நோபல் பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ


லாரன்சு மறைந்த தினம் - ஆகஸ்ட் 27:


யுரேனிய ஐசோடோப்பை  பிரித்தெடுக்கும் முறையைக் கண்டறிந்ததற்காகவும், அறியப்படுகிறார்.


தெற்கு டகோடா பல்கலைக்கழகம் மற்றும் மினசோட்டா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டதாரியான லாரன்ஸ் 1925 ஆம் ஆண்டு யேலில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். 


1928 ஆம் ஆண்டில் அவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். ஒருநாள் மாலையில் லாரன்ஸ் நூலகத்தில் அதிக வேக துகள்களை உற்பத்தி செய்யும் ஒரு முடுக்கியின் வரைபடத்தை கண்டார். 


அந்த வரைபடத்தால் கவரப்பட்டு ஆராயும் போது இரண்டு மின்காந்த புலங்களுக்கிடையே வட்டப்பாதையில் முடுக்கப்படும் கலன் பற்றிய யோசனை வந்தது. இந்த யோசனையின் வெளிப்பாடு தான் சைக்ளோட்ரானாக அமைந்திருந்தது.


லாரன்ஸ் பெரிய மற்றும் அதிக விலையுயர்ந்த சைக்ளோடான்களை தொடர்ச்சியாக உருவாக்கினார். 1936 ஆம் ஆண்டு அவரது கதிர்வீச்சு ஆய்வுக்கூடம் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ துறையாக ஆனது. லாரன்ஸ் அதன் இயக்குநராக இருந்தார். 


இயற்பியலுக்காக சைக்ளோட்ரோனைப் பயன்படுத்துவதோடு கூடுதலாக ரேடியோ ஐசோடோப்களின் மருத்துவ பயன்களை ஆய்வு செய்வதில் லாரன்ஸ் ஆர்வம் காட்டினார். இரண்டாம் உலகப் போரின் போது, லாரன்ஸ் தனது கதிர்வீச்சு ஆய்வகத்தில் மின்காந்தத்தை பயன்படுத்தி ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கினார். 


கலூட்ரான் என்ற இயந்திரத்தை இதற்காக பயன்படுத்தினார். டென்னெஸியில் உள்ள ஒக் ரிட்ஜ் ல் மிகப் பெரிய மின்காந்தத்தை பயன்படுத்தி ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் ஆலையை உருவாக்கினார். இது Y-12 என அழைக்கப்பட்டது. 


திறனற்றதாக அது இருந்தாலும் வேலை செய்தது.

போருக்குப் பின்னர், லாரன்ஸ் அரசு ஆதரவோடு பெரிய அறிவியல் திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். அதிக அளவு செலவு செய்து மிகப்பெரிய இயந்திரங்களை உருவாக்குவதற்கு “பெரிய அறிவியல்” என்ற திட்டத்தை தொடங்கி பிரசாரம் செய்தார். 


கலிபோர்னியாவின் லிவர்மரில் அமைந்த இரண்டாம் அணு ஆயுத ஆய்வகத்திற்கு எட்வர்ட் டெல்லர் பிரச்சாரத்தை வலுவாக ஆதரித்தார். அவருடைய இறப்புக்குப் பிறகு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆட்சியாளர்கள் லாரன்ஸ் லிவர்மோர் நேஷனல் லேபாரட்டரி மற்றும் லோரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்திற்கு அவருடைய பெயரையே வைத்து அவரை கவுரவித்தது. 


1961 ஆம் ஆண்டில் பெர்க்லீயில் கண்டுபிடித்த 103 வது தனிமத்திற்கு லென்டூரியம் என்று பெயரிடப்பட்டது அவருக்கு கிடைத்த மிக்ப் பெரிய கெளரவம்.


Ernest Orlando Lawrence (August 8, 1901 – August 27, 1958) was a pioneering American nuclear scientist and winner of the Nobel Prize in Physics in 1939 for his invention of the cyclotron. He is known for his work on uranium-isotope separation for the Manhattan Project, as well as for founding the Lawrence Berkeley National Laboratory and the Lawrence Livermore National Laboratory.


A graduate of the University of South Dakota and University of Minnesota, Lawrence obtained a PhD in physics at Yale in 1925. In 1928, he was hired as an associate professor of physics at the University of California, becoming the youngest full professor there two years later. In its library one evening, Lawrence was intrigued by a diagram of an accelerator that produced high-energy particles. He contemplated how it could be made compact, and came up with an idea for a circular accelerating chamber between the poles of an electromagnet. The result was the first cyclotron.


Lawrence went on to build a series of ever larger and more expensive cyclotrons. His Radiation Laboratory became an official department of the University of California in 1936, with Lawrence as its director. In addition to the use of the cyclotron for physics, Lawrence also supported its use in research into medical uses of radioisotopes. During World War II, Lawrence developed electromagnetic isotope separation at the Radiation Laboratory. It used devices known as calutrons, a hybrid of the standard laboratory mass spectrometer and cyclotron. A huge electromagnetic separation plant was built at Oak Ridge, Tennessee, which came to be called Y-12. The process was inefficient, but it worked.


After the war, Lawrence campaigned extensively for government sponsorship of large scientific programs, and was a forceful advocate of "Big Science", with its requirements for big machines and big money. Lawrence strongly backed Edward Teller's campaign for a second nuclear weapons laboratory, which Lawrence located in Livermore, California. After his death, the Regents of the University of California renamed the Lawrence Livermore National Laboratory and Lawrence Berkeley National Laboratory after him. Chemical element number 103 was named lawrencium in his honor after its discovery at Berkeley in 1961.

Saturday, 4 July 2020

TN SCERT 8 ஆம் வகுப்பு கணக்கு வீடியோ

Click to watch video

https://www.youtube.com/playlist?list=PLrEkyHXS85Xs9_HKOr8_f4iAB1TDPXm4

Wednesday, 1 July 2020

அறிவியல் சோதனை வீடியோக்கள்

அறிவியல் சோதனை வீடியோக்கள் Arvind gupta (Tamil version) - TN SCERT (434 VIDEO)


*TN SCERT*
*அறிவியல் செய்முறை வீடியோக்கள்*
*தமிழில்*
*ARVIND GUPTA*
(434 Video)

Tuesday, 23 June 2020

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் (T/M, E/M) இணையதளத்தில் பதிவேற்றம்..

E-learn TN SCHOOLS 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 

அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம். 

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இணைய முகவரி:  

Thursday, 4 June 2020

தினம் ஒரு சிந்தனை

இன்றைய சிந்தனை..( 04.06.2020)..
……………………………………………......................

'' முயற்சியை கை விடாதீர்கள்..''
.........................................................

வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும்....

சிலர் கடுமையாக முயற்சி செய்தும்  வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சிப்பது இல்லை.

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள்.அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும்..        மேலே உள்ள கண்ணாடியில் இடித்து,“ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும்போது பார்த்து போகனும் என்று தீர்மானித்து கொள்ளும்.

அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக,வெளியே செல்ல முயற்சி செய்யும்..அதே அடி.அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.

சரி, இதுதான் நமது வாழ்க்கை. இந்த கூண்டுக்குள்தான் இனி நம் வாழ் நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.

ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடும்.

அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.

இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலியும் இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.

அனைத்து பக்கங்களிலும் பறக்கும்.எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும்.அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொண்டு அந்த கூண்டிலேயே தன் மீதிநாள் வாழ்க்கையை முடித்துவிடும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.

ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வாழும்..

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து,முயற்சி செய்து இருந்தால் அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்..

ஆம்.,அன்பு நண்பர்களே..,

தொடர்ந்து முயற்சி செய்வதை கைவிட்டு விட்டு., நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று தான் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்...

 தொடர்சியாக முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவார்.எப்போதும் முயற்சியை மட்டும் விட்டு விடக்கூடாது

காலம் கடந்தாலும் பொறுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

முயற்சி செய்யுங்கள் ''வெற்றி'' கிடைக்கும்.
முயற்சி செய்யுங்கள் ''தோல்வியும்'' கிடைக்கும்.

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.,

'தோல்வியும் வெற்றியாக'' மாறும்........

Tuesday, 2 June 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை.( 02.06.2020)*

……………………………………………...................

''அச்சம் என்ற உணர்வு''
.....................................

ஓர் ஆபத்து நிகழப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, அச்சம் என்பது இயல்பாகவே வந்து விடுகிறது...

இந்த உணர்வு அச்சமென்று பொதுமைப் படுத்தப்பட்டாலும் கவலை, பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது...

மொத்தத்தில், அச்சம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீத கற்பனையால் விளைவது...

அச்சங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின்சேதாரம்...

தோற்று விடுவோமோ எனும் அச்சத்தில் பலர் முயற்சிக்கான முதல் அடியை எடுத்து வைப்பதில்லை...

முதல் அடியை எடுத்து வைக்காதவர் எப்போதுமே பயணம் செல்லமுடியாது என்பது பொது நியதி...

வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, 'தோல்வியடைந்து விடுவோமோ எனும் அச்சம்தான்’ என்கிறார் சேக்ஸ்பியர்.

தோல்வியும், வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது...!

தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்றுதான் பொருள்...

வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்...

ஆனால், தோல்வி குறித்த அச்சத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவது இல்லை என்பதுதான் உண்மை...

விழிப்புணர்வு என்பது வேறு, அச்சம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம்..
ஆனால், அதுவே ஆளை விழுங்கும் அச்சமாக மாறிவிடக்கூடாது என்பதை நாம் கவனிக்க வேண்டும்...

தோல்வி குறித்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை தரும்...

வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து குறித்த பயத்தில் `இருக்கை வார், (seat belt)’ அணிவது எச்சரிக்கை உணர்வு...

விபத்து குறித்த அச்சத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்...

வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்துவிடக் கூடாது...

ஆம் நண்பர்களே...!

*அச்சம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும்...*

*அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்துவிடக் கூடாது...*

*மொத்தத்தில் எப்படியாவது அச்சத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்.. இறுதியில் அச்சம் அர்த்தமற்றது என்று எண்ணுவீர்கள்...*


Monday, 1 June 2020

தினம் ஒரு சிந்தனை


இன்றைய சிந்தனை

*தீதும் நன்றும் பிறர்தர வாரா*

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

 *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

 *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

 *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

 *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

 *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா*

Tuesday, 26 May 2020

தினம் ஒரு சிந்தனை

*இன்றைய சிந்தனை *

...........................................
*‘’சிரிப்பே மருந்து..''*
.................................

பொதுவாக மக்கள் அனைவரும் சிரிப்பே சிறந்த மருந்து; இதனால் நாம் எப்போதும் சிரித்து வாழ வேண்டும்” என கூறுவர்...

பொதுவாக சிரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்...

மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் மகிழ்ச்சியாக வாழுங்கள்” என அறிவுறுத்துவர்...

சில மக்கள் காலையில் சிறப்பு சிரிப்பு வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இந்த வகுப்புகளில் அனைவரும் வெவ்வேறு விதங்களில், சத்தமாக சிரிக்கின்றனர்...

நன்றாக சிரிப்பதால் நீண்ட ஆயுள் வாழலாம். இவ்வாறு கூறுவதற்கு பல காரணங்களும், உண்மைகளும் இருக்கின்றன...

சிரிப்பதால் மனம் இளைப்பாறும். பொதுவாக சிரிப்பு அல்லது நகைச்சுவை, நமது மனதை நிம்மதியாக வைப்பதற்கு உதவும்...

மன அழுத்தம்,
மன வேதனை,
வலி போன்றவற்றிற்கு சிரிப்பு நல்ல மருந்து.. மன உளைச்சல் மற்றும் கோபம் போன்றவற்றை கட்டுபடுத்த, சிரிப்பு உதவுகிறது...

நாம் மன உளைச்சலுக்கு உள்ளான நேரங்களில், நகைச்சுவை திரைப்படங்களையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் காண வேண்டும்...

சிரிப்பு அமைதியைத் தருகிறது, நாம் கோபம் அல்லது வெறுப்பு ஏற்படும் காலங்களில், சிரித்து விடுவது நல்லது. சிரிப்பு மன உளைச்சலைக் குறைத்து, நல்ல உணர்வுகளை உடலிலும், மனதிலும் நிரப்புகிறது...

சிரிப்பினால் உடல் அளவிலும், மனதளவிலும், உணர்வு ரீதியாகவும் நமக்கு ஏற்படும் நிலைப்பாட்டை உணர்த்துகிறது...

சிரிப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது...

ஆம் நண்பர்களே...!

*சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது...*

*மனம் ஆரோக்கியம அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது ...*

*சிரிப்பெனும் மருந்தை நாம் தினம் தினம் அருந்துவோம்...*


Monday, 25 May 2020

இன்று



மருத்துவ துறையில் உடல் வெப்பநிலையை கண்டறியும் பாரன்ஹீட் தெர்மாமீட்டரைக் கண்டறிந்த *டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்* அவர்கள் பிறந்த தினம் மே-24.

பன்னெடுங்காலமாகவே வெப்பநிலையில் வேறுபாடுகள் நிலவுவதை மனிதர்கள் ஆராய்ந்து வந்தாரகள்.

பனிக்கட்டி குளிர்ச்சியாக இருப்பதற்கும், சுடு நீர் வெப்பமாக இருப்பதற்கும், மனிதனுக்கு காய்ச்சல் ஏற்படும் போது உடல் வெப்ப நிலை அதிகரிப்பதை கண்டறிவதற்கு பல ஆராய்ச்சிகள் நடைபெற்ற தருணத்தில்,

*1686 ஆம் ஆண்டு மே-24  ல் பிறந்த டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்* என்பவரால் 1709 ஆம் ஆண்டு மெல்லிய கண்ணாடி குழாயில் பாதரசம் பயன்படுத்தி, அதில் அளவுகளை டிகிரியில் குறித்து பாதரசம் ஏற்ற இறக்கத்தை வைத்து முதன் முதலாக அவர் தயாரித்த வெப்பநிலை மானியை இன்று *அவர் பெயராலேயே பாரன்ஹீட் தெர்மோமீட்டர் என்று அழைக்கிறோம்*.

D.G.பாரன்ஹீட் தண்ணீரின் உறைநிலையை 32 டிகிரி என்றும், கொதிநிலையை 212 டிகிரி கணக்கிட்டு பயன்படுத்தினார்.
வெப்பநிலையை அளவிடுவதில் ஒரு சீரான தரவுகளை இவரது முயற்ச்சியால் எட்டப்பட்டது.

மருத்துவ துறையில் இவர் கண்டுபிடிப்பு பல கோடி உயிர்களை இன்றளவும் காப்பதற்கு காரணமாக விளங்கி வருகிறது என்றால் அது மிகைஅல்ல உண்மை.




Saturday, 23 May 2020

இன்று

உயிரியலாளரும், மருத்துவருமான கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) பிறந்த தினம் - மே 23:

ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் (1707) பிறந்தார். தந்தை பாதிரியார், தாவரவியலாளர். மகனுக்கு சிறந்த கல்வி புகட்டுவதையே தன் நோக்கமாகக் கொண்டிருந்தார். லத்தீன் மொழி, தாவரவியல், மதக் கல்வி ஆகியவற்றை தந்தையிடமே கற்றார்.

தாவரங்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு தாவரங்களை வளர்த்தார். பல புதிய தாவரங்களை தேடிக் கண்டறிந்தார். இவரது ஆர்வத்தை அறிந்த தந்தை, வீட்டிலேயே ஒரு ஆசிரியரை அமர்த்தி பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்.

பள்ளியில் 10 வயதில் சேர்ந்தார். தாவர ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். இவரது திறமையை உணர்ந்த ஆசிரியர் ஒருவர், மருத்துவம் படிக்குமாறு ஆலோசனை கூறினார். அதை ஏற்று தனிப்பட்ட முறையில் உடலியல், தாவரவியல் பயில தந்தை ஏற்பாடு செய்தார். லுண்ட், உப்சாலா பல்கலைக்கழகங்களில் பயின்றார்.

படிப்பை முடித்து உப்சாலா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை விரிவுரையாளராக பணியாற்றினார். இவரது விரிவுரைகள் மிகவும் பிரபலமடைந்தன. தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதத்தை மேம்படுத்துவது குறித்து கட்டுரைகள் எழுதினார். இதையடுத்து, தாவர ஆராய்ச்சியில் ஈடுபட இவருக்கு நிதி கிடைத்தது.

நீண்ட பயணம் மேற்கொண்டவர், தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார். இந்தப் பயணத்தின்போது 100 புது வகை தாவரங்களைக் கண்டறிந்தார்.

‘ஃப்ளோரோ லேப்போனிகா’ என்ற நூலை எழுதினார். விலங்குகள், தாவரங்களுக்கு இரு-பகுதி பெயரிடும் முறையைத் தொடங்கி வைத்தார். நெதர்லாந்தில் உள்ள ஆர்தர்ஜிக் பல்கலைக்கழகத்தில் மலேரியா மற்றும் அதன் காரணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி சமர்ப்பித்து, மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

இவரது ‘சிஸ்டம் ஆஃப் நேச்சர்’ நூல் 1737-ல் வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தாவரங்கள் பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் குறித்த உத்திகளை மேம்படுத்திய வண்ணம் இருந்தார். இங்கிலாந்து, பிரான்ஸ் சென்று, நிறைய மாதிரிகளை சேகரித்ததோடு அங்குள்ள அறிவியலாளர்களை சந்தித்தார்.

ஸ்வீடன் திரும்பி, ஸ்டாக்ஹோமில் மருத்துவராக பணிபுரிந்தார். ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி உருவாக உதவி செய்து, முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். உப்சாலா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக 1741-ல் பொறுப்பேற்றார். 1750-ல் பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இயற்கை அறிவியல் களத்தில் ‘மாஸ்டர் பீஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட, 1,200 பக்கங்கள் கொண்ட ‘பிளான்ட் ஸ்பீசிஸ்’ நூலை 2 தொகுதிகளாக 1753-ல் வெளியிட்டார். அப்போது கண்டறியப்பட்டிருந்த அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்துக்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார். தாவரங்கள் மட்டுமல்லாது விலங்கு, பறவை, மீன், உள்ளிட்ட ஏறக்குறைய 13 ஆயிரம் உயிரினங்களுக்குப் பெயரிட்டார்.

ஸ்வீடன் மன்னர் இவருக்கு 1761-ல் சர் பட்டம் வழங்கினார். தற்கால சூழலியலின் (Ecology) முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், நவீன அறிவியல் வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான கார்ல் லின்னேயஸ் 71-வது வயதில் (1778) மறைந்தார்.

Thursday, 21 May 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை....*  ( 21 .05 .2020)

*மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு*

*ஆனால்.....*

*#வண்டிக்காரன் உயிரில்லாத வண்டியை....*
*அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..*
*எந்த இடம் செல்ல வேண்டும்...*
*என்பதை தீர்மானித்து, வண்டியை செலுத்துவான்.*

*#எவ்வளவு_தூரம்...*
*#எவ்வளவு_நேரம்...*
*#எவ்வளவு_பாரம்...*

*அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!அறிவிருந்தும்.....*
*சுமப்பது தானாக இருந்தாலும் மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது...*

*அதுபோல....*

*உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா,* *உயிர் என்ற மாட்டுடன் பூட்டி*
*இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்....*

*#அவனே_தீர்மானிப்பவன்*
*#அவன்_இயக்குவான்..*
*#மனிதன்_இயங்குகிறான்..*

*#எவ்வளவு_காலம்..*
*#எவ்வளவு_நேரம்..*
*#எவ்வளவு_பாரம்..*

*#தீர்மானிப்பது_இறைவனே*

*இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் டிசைன்..!*
*இதுதான் இறைவன் நமக்கு தந்திருக்கும் அசைன்மென்ட்..!*
*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*
*இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.*

*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே!.*

Tuesday, 19 May 2020

அறிவோம் தெளிவோம்

விந்தையான மீன்-
 இந்த மீனின் தலைப்பகுதி ஒளி ஊடுருவிய அமைப்பில் (Transparent head) உள்ளது. தலையினுள் உள்ள பகுதிகள் தெரியும் வகையில் உள்ளது. இதன் பெயர் பேரல் கண் மீன் (Barrel eye fish) எனவும் ஸ்பூக் மீன் (Spook fish) எனவும் அழைக்கப்படுகிறது

தினம் ஒரு சிந்தனை




இன்றைய சிந்தனை..( 19.05.2020)
...........................................

‘’ சோதனைகளை கடந்தால்தான்’’..
....................................

பலவித சோதனைகளை கடந்தால்தான் சாதனையை அடைய முடியும்.

சோதனைகளில் சோர்வடையாமல், விரக்தி அடையாமல், தோல்வியில் மனம் உடைந்து போகாமல் சாதனைகள் புரிய முயற்சி செய்ய வேண்டும்.

சாதனை புரிபவர்களுக்கு நம்முடைய செயல்களை பிறர்க்கு நாம் எப்படிப்பட்டவர் என்பதை பிறர்க்கு உணர்த்தவேண்டும்.

அது மட்டும் அல்ல., சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயல்கள் ஆகின்றனவா? என்பதை அறிந்தபின் செயலாற்ற வேண்டும். சாதனை புரிய இதுவும் ஒரு வழியாகும்.

நீண்ட தூரம் ஓடி வந்தால்தான் உயரம் தாண்ட முடியும் என்பதை நாம் அறிந்து இருக்கிறோம்.

படிக்கும் நூல்கள் மூலம், சந்திக்கும் மனிதர்கள் மூலம் சாதனை புரிய வழி இருக்கிறதா? என்று பார்ப்பது ஒவ்வொரவரின் கடமை.

வாழ்வில் வரும் சோதனைகளில் இருந்து மீள ஒருவர் வழி தேடினார்..அவர் ஒரு அறிஞரை சந்தித்து கேட்டார்.

அதற்கு அவர் குதிரைப் பந்தயத்திற்கு செல்லுங்கள்..ஆனால் பணம் கட்டாதீர்கள்.. பந்தயம் மட்டும் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
.
மாலை திரும்பியதும் அதற்கு அவர் விளக்கம் சொன்னார்..

’’பந்தயக் குதிரைக்கு நான் ஏன் ஓடுகின்றோம் என்று தெரியாது.ஆனால் முதுகில் அடி விழும்போதெல்லாம் இன்னும் வேகமாக ஓடுகிறது..இலக்கை சென்று சேர்கிறது..

குதிரைக்கே இந்த புரிந்தால் இருந்தால், குறிக்கோள் கொண்ட மனிதனுக்கு இருக்க வேண்டாமா? என்றார்.

’’சோதனைகளில்தான் சாதனை’’ என்பதை இப்படி விளக்கினார் அந்த அறிஞர்..

ஆம்.,நண்பர்களே..

சாதனை புரிவதற்கு முன் வரும் சோதனைகளை பயிற்சியாக ஏற்றுக் கொண்டால்தான் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியும்..

எனவே இதை மனதில் கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்

Monday, 18 May 2020

பல வகை துறைகள் அறிவியல் பெயர்கள்.





பல வகை துறைகள் அறிவியல் பெயர்கள்.



https://drive.google.com/file/d/1OI_rv9XKJ69MtcnDC7BpObmF-szKdR2e/view?usp=drivesdk

இன்று

பெர்ட்ரண்டு ரஸ்ஸல்..!

பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் தனது வாழ்க்கையை பெரும்பாலும் இங்கிலாந்தில் கழித்தாலும், தான் பிறந்த இடமாகிய வேல்சில் இறந்தார்.

ரசல் 1900களின் தொடக்கத்தில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராகக் கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வுத் தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் கோட்லோப் பிரேக் என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை தருக்கத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" (On Denoting) "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" எனக் கருதப்படுகிறது. இந்த இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம் முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.

ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வணிகத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் அடைக்கப்பட்டார். இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தார். அணுகுண்டு கைவிடுதலையை ஆதரித்தார், அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தார்.

ரசலுக்கு, அவரின் பலவகைப்பட்ட எழுத்துகளினால், "மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும்" 1950 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1949 ல் ”நான் நாத்திகனா, இறை ஐயம் கொண்டவனா” என்ற உரையில்,
நான் “தத்துவ அளவில் அல்லது தத்துவ அவையினர் முன்னிலையில் பேசுவதானால், என்னை இறை ஐயம் கொண்டவன் என வருணிக்க வேண்டும். ஏனெனில் ஆணித்தரமாக கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை உறுிப்படுத்துவதற்கு நிரூபணங்கள் இல்லை. அதே சமயம் சாதாரண மனிதனுக்கு என் எண்ணத்தை சொல்வதானால், என்னை நாத்திகன என வருணிக்க வேண்டும்" என்று கூறினார்.

பால்ய பருவத்தில் ரசல் நிரந்தர உண்மைகளுக்காக ஏங்கினார், அவருடைய புகழ்பெற்ற கட்டுரையான “சுதந்திர மனிதனின் துதி”, என்பதில் இயற்கைக்கு புறம்பான, அமானுஷ்ய நம்பிக்கைகளை வெறுத்தாலும், நான் வாழ்க்கையின் ஆழ்ந்த பொருளைப் பற்றி ஏக்கம் கொண்டுள்ளதாக ஒத்துக் கொண்டார்.

 ”நான் ஏன் கிருஸ்துவன் இல்லை” என்பது பற்றி 6 மார்ச் 1927 ல் பாட்டர்சீ நகர மாளிகையில், தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண்டன் கிளையில் உரையாற்றினர், ஒரு வருடம் கழித்து அது துண்டுப்பிரசுரமாக வெளிவந்தது. அதில் கடவுள் நம்பிக்கையின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையியல் பற்றியும் பேசுகிறார். அவருடைய முடிவு,

”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டது என நினைக்கிறேன். அது ஒரு பகுதி நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய பீதி, மற்றொரு பகுதி நம் பக்கத்தில் ஒரு அண்ணன் இருந்து நம் துக்கங்களிலும் வாழ்க்கை கஷ்டகாலங்களிலும், சச்சரவுகளிலும் ஆதரவு கொடுப்பதாக ஒரு உணர்வு.......

ஒரு நல்ல உலகம், அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மீது பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் வேண்டவில்லை”

 ரசல் அவர்களின்
 (Bertrand Arthur William Russell),
பிறந்த நாள் இன்று
(மே 18,1872)

Sunday, 17 May 2020

இன்று

தடுப்பூசிகளின் தந்தை பிறந்த தினம்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து
கண்டுபிடித்த எட்வர்டு ஜென்னர் (Edward Jenner) பிறந்த
தினம் இன்று (மே 17).

இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் (1749) பிறந்தார். தந்தை மதச் சடங்குகள் செய்பவர்.14-வது வயதில் டேனியல் லட்லாவ் என்ற அறுவை சிகிச்சை
நிபுணரிடம் சேர்ந்து 7 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி
பெற்றார். மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக
மாறினார். கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் கண்டவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கருத்தில் ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் 1765-ல் ஒரு கட்டுரை எழுதி லண்டன்மருத்துவக் கழகத்துக்கு
அனுப்பினார். அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை. பெரியம்மைக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்தே தீருவது என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி
மேற்கொண்டார். 1792-ல் செயின்ட் ஆண்ட்ரூஸ்
பல்கலைக்கழகத்தில் மருத்துவப்ப ட்டம் பெற்றார். இயற்கையைஅதிகம் நேசித்தார்.

குயில்களின் வாழ்க்கை முறை குறித்து ஆய்வு
மேற்கொண்டு பல  கட்டுரைகளை வெளியிட்டார்.
1796-ல் கவ் பாக்ஸ் நோய் கண்ட பெண்ணின் விரலில் இருந்து கிருமியை எடுத்து ஒரு சிறுவனுக்கு செலுத்தினார்.

சிறுவனும்நோயால்தாக்கப்பட்டான். 7 வாரங்கள் கழித்து பெரியம்மையால்தாக்கப்பட்டவர் உடலில் இருந்துகிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில்
செலுத்தினார். ஆனால், அந்தசிறுவனை பெரியம்மை
தாக்கவில்லை.தொடர்ந்து பலரிடம் நடத்தப்பட்ட
சோதனை வெற்றியடைந்தது.

கவ் பாக்ஸ் (cow pox) கிருமிகளைமென்மைப்படுத்தி ஊசிமூலம்ஒருவரது உடலில்செலுத்தினால் அவரை
பெரியம்மை தாக்காது என்பதை திட்டவட்டமாக
நிரூபித்தார்.ஆராய்ச்சி முடிவுகளை 1778-ல் வெளியிட்டார்.இயற்கையையும்மனிதகுலத்தையும்
அளவுகடந்து நேசித்த இவர்தனது இந்த அரிய
கண்டுபிடிப்புக்கு எந்த காப்புரிமையும் பெறாமல்
இலவசமாக வழங்கினார்.

அம்மை குத்துதல் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள்
எழுதினார். ஏழை,எளியவர்களுக்கு இலவசமாக
அம்மை ஊசி குத்தினார்.தினமும் இவரது அறைக்கு
முன்பு சுமார் 300 பேர் வரிசையில் நின்று அவரிடம் அம்மை தடுப்பூசிபோட்டுக்கொண்டனர். ஜென்னரை கவுரவித்துபிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ல் 10 ஆயிரம் பவுண்டுகள்வழங்கியது. 4 ஆண்டுகளுக்குப்
பிறகு மேலும் 20 ஆயிரம்பவுண்டுகளை வழங்கியது.
அந்தத் தொகையை கொண்டு 1808-ல் தேசிய தடுப்பூசிக் கழகத்தை நிறுவினார்.

Saturday, 16 May 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை.( 16.05.2020)

……………………………………………..........

"சோம்பலை விரட்டுவோம்.."

.......................................................

நம் முன் பரந்து கிடக்கும் வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறச் செய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என எண்ணி மூலையில் முடங்கிப்போய் விடுகினறோம்...

சோம்பேறியை அழைத்து “என்னப்பா, படித்து விட்டாயே! இப்பொழுது  என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டால் சும்மாதான் இருக்கிறேன்” என்பான்...

“சும்மா” என்ற வார்த்தை தமிழ் இல்லை. சோம்பேறிகள் தோற்றுவித்த மொழி  இது, அவர்களுக்கு மட்டுமே சொந்தம்...

உற்சாகமுடையவர்கள் இவ் வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்...

சோம்பேறித்தனத்திற்கு சிலர் வறுமையைக் காரணம் காட்டுவார்கள்...

அப்படி காரணம் காட்டுபவர்களும் சிந்திக்கத் தெரியாத சோம்பேறிகளே...!

சோம்பல்தான் சுறுசுறுப்பின் எதிரி !, சோம்பல் மிக்கவர்கள் படுக்கையை விட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்து விட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள்...

சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்...

இவர்கள் சிரங்குகளை சொறிந்து புண்களை உண்டாக்குபவர்கள்.

வாழ்வின் பாதையில் முள்வேலியாய் நிற்பது சோம்பலே.,முதலில் சோம்பலை விரட்டுங்கள்...

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்...

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்...

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித்தாவி ஏறியது...

அதைப் பார்த்த ஒரு மனிதன், "மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்...

அதற்கு அந்தப் பறவை,

"மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது...

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது...

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு,

அந்த மனிதனைப் பார்த்து,"மனிதனே, நீயும் தேடு...
மரத்திலும், மண்ணிலும்,நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான்,..

"நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்...

''சோர்வு'' என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ''தீர்வு''...

சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ!

ஆம் நண்பர்களே...!

*ஒருவன் அடையும் முன்னேற்றத்தை கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல்தான். சோம்பலால் கால தாமதம் நேர்கிறது.கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது...*

*எனவே.,சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக அடைய வைப்போம்...*