Wednesday, 12 October 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2022

  திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம் : வான் சிறப்பு. 

குறள் 12.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

பொருள் :

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்களுக்கு இந்த உணவாகவும் பயன்படுவது மழையே.

பழமொழி :

நீங்கள் வெளியே செல்லும் வரை ஒருபோதும் துடுப்பை வீச வேண்டாம்

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.

இரண்டொழுக்க பண்புகள்:

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.

பொன்மொழி :

கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.

பொது அறிவு :

1. இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர் எது ? 

நெல் . 

2.இந்தியாவில் எந்த ஆண்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது ? 

1953 ஆம் ஆண்டு.

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

கேட்டனேஷன் - ஒரே தனிமங்களின் அணுக்களை பிணைத்து ஒரு சங்கிலியை உருவாக்குதல். கார்பன் அணுக்கள் கேட்டனேஷன் உருவாக்க முனைகின்றன. சங்கிலியாக்கம். சங்கிலி இணைப்பு

ஆரோக்ய வாழ்வு :

கேரட் வேர் காய்கறிகளை சார்ந்ததாகும், அவை எண்டோடாக்சின்கள், பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்ரோஜனுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் தனித்துவமான இழைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு சில நாட்களுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட்டால், உயர் எண்டோடாக்சின்கள், உயர் கார்டிசோல் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லலாம். உடலில் உள்ள எண்டோடாக்சின்களை நச்சு நீக்க இது ஒரு சிறந்த வழியாகும்.



 


நீதிக்கதை

குகையுடன் பேசிய நரி

ஒரு காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இரை தேடிக் காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. வழியில் ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, சிங்கத்திற்கு ஒரு யோசனை பேசாமல் நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்து கொண்டால், இந்த குகையில் இருக்கும் விலங்குகள் இரை தேடிவிட்டு மீண்டும் இங்கேதானே வரும். அப்படி வரும் விலங்குகளை பிடித்து விடலாம் என்று நினைத்து அந்த குகைக்குள் சென்று படுத்துக் கொண்டது. 


அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. தன் குகைக்குத் திரும்பி வந்து தன் குகைக்குள் நுழைய முனைந்தபோது குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்து குகைக்குச் சிங்கம் ஒன்று வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. ஆனால் நரிக்கு ஒரு சந்தேகம்?. சிங்கம் உள்ளே இருக்கிறதா? அல்லது சென்று விட்டதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக குகைக்கு வெளியே நின்று கொண்ட நரி, ஏய், குகையே! ஏய், குகையே! என்று அழைத்தது. சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்து கொண்டது. அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது. 


நரி, மீண்டும், ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்றது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த நரி குகையிடம் பேசுகிறது? என்று யோசித்தது. நரி, குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டது. அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை என்று நினைத்தது. நரி, ஏய், குகையே! நீ பேசிய பிறகுதானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்? என்றது. 


சிங்கம் பதறிப் போனது. அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு இரை கிடைக்காதே! என்று நினைத்த சிங்கம் குகைபோலப் பேசினால், அந்த நரி குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை அடித்துச் சாப்பிட்டு விடலாம்! என்று நினைத்து, ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. தவறாக நினைக்காதே. வா உள்ளே! என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது. அவ்வளவுதான், குகைக்குள் இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது. 


நீதி:

எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்.

இன்றைய செய்திகள்

12.10.22

*அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்கப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.

* வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 * 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடைபெற்றது.

* ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அஸ்டம் ஓரானின் குடும்பத்திற்கு ஜார்க்கண்ட் அரசு, டிவியும் இன்வெட்டரும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அந்தக் குடும்பமும் கிராமத்தினரும் முதல் முறையாக தங்கள் வீட்டுப் பெண் ஆடுகளத்தில் விளையாடுவதைப் பார்க்கிறார்கள்.

* பூமியில் இருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.

* ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உக்ரைன்.

* தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

* 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது.

* மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்திய தாய்லாந்து அணி.

இன்றைய தலைப்புச் செய்திகள்

* கனமழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்கப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.

*வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதை தவிர்க்க கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  * 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது என அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 *இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடந்தது.

* FIFA U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய கேப்டன் அஸ்தம் ஓரனின் குடும்பத்திற்கு ஜார்கண்ட் அரசு டிவி மற்றும் இன்வெர்ட்டர் வழங்கியுள்ளது. இதன் மூலம், தங்கள் மகள் முதல் முறையாக மைதானத்தில் விளையாடுவதை குடும்பத்தினரும், கிராம மக்களும் நேரில் பார்த்து வருகின்றனர்.

 * பூமியில் இருந்து 7,100 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்ணைக் கவரும் குமிழியால் மூடப்பட்ட நெபுலாவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

* ஐநா பொதுச் சபையின் அவசர கூட்டத்தில், ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து உக்ரைன் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

* தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகம் பதக்க பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளது.

 * 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் மகளிர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது.

* மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்து அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

 

 த



கோவை பெண்கள்


No comments:

Post a Comment