Wednesday, 18 August 2021

அறிவோம் தெளிவோம்

அறிந்துகொள்வோம்

    மெரிக்காவின் மொண்ட்டானா மாநிலத்தில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தால், மலைப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது ஏற்பட்டு, சுமார் 10 கி.மீ.நீளத்துக்கு,190 அடி ஆழத்திற்கு நிரந்தரமாக (நிலநடுக்க ஏரி என்றே பெயரிடப்பட்ட) ஓர் ஏரி உருவானது. 7.3 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால், 7,600 அடி உயர மலையில் கிட்டத்தட்ட பாதி உடைந்து,135 கோடி கன அடி(8கோடி டன்) அளவுக்குப் பாறைகள், மண் ஆகியவை சரிந்து பள்ளத்தாக்கில் விழுந்தன. இந்த நிலச்சரிவினால் கார்களைத் தூக்கி வீசுமளவுக்கு மிக அதிவேகத்தில் காற்றும் உருவானது. இப்பகுதி சுற்றுலாப் பயணிகள் கூடாரம் அமைத்து தங்கும் மலைப்பகுதி என்பதால், 28 பேர் பலியானதுடன், ஏராளமான விடுதிகள் அழிந்தன.

      மேடிசன் ஆற்றினையொட்டியுள்ள ஹெப்ஜென் ஏரியில் சுனாமி போன்று அலைகள் எழுந்ததுடன், ஏரியையொட்டிய ஹெப்ஜென் அணையிலும் விரிசல்கள் ஏற்பட்டன. நிலச்சரிவு மேடிசன் ஆற்றின் நீர்ப்பாதையை முழுமையாக அடைத்ததால் இவ்வளவு பெரிய ஏரியும் ஒரு மாதத்திற்குள்ளாக நிரம்பியதுடன், ஏரியிலிருந்து நீர் வெளியேற வழியில்லாததால், வந்து கொண்டேயிருக்கும் நீரால் ஏரி சேதமுற்று மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

   அமெரிக்க ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் ஏராளமாகக் குவிக்கப்பட்டு, நீர் வழிந்தோடுவதற்கான வழி, மிக விரைவாக அமைக்கப்பட்டது. இதனால், இன்று வரை, இந்த ஏரி பாதுகாப்பாக உள்ளது.  

      இதைப் போன்று,                                                           நிலநடுக்கத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் நிலச்சரிவினால் ஏற்படுபவை, நிலச்சரிவு நீர்த்தேக்கங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஸ்னோடானியா தேசியப் பூங்காவிலுள்ள நீர்த்தேக்கம், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலச்சரிவினால் உருவானதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாஜிக்ஸ்தானிலுள்ள உசோய் நீர்த்தேக்கம் 1911-ல் ஒரு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏற்பட்டது. 1860 அடி உயரமுள்ள இதுதான் உலகின் மிக உயரமான நீர்த்தேக்கமாகும்.

    மனிதனால் கட்டப்பட்ட வற்றில் மிக உயரமான அணையே, சீனாவிலுள்ள 1001 அடி உயர ஜின்பிங் 1 அணைதான். 


No comments:

Post a Comment