Sunday, 29 August 2021

இன்றைய தினம்

 மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்த தினம் - ஆகஸ்டு 29, 1831:


மைக்கேல் பரடே பிரிட்டனை சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவுயாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே. 


பாதியிலேயே பள்ளிப்படிப்பைவிட்ட ஃபாரடே தனது விஞ்ஞான ஆர்வத்தாலும், சுய முயற்சியாலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திச் சாதனை புரிந்தார். மின்னியலில் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் அவரது ஆய்வுகள், அவற்றைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் பலன்களை இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.. இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

No comments:

Post a Comment