Sunday, 30 August 2020

புதிய பார்வை

 

 புதிய பார்வை


நின்று 

நிதானித்து 

யோசிக்க 

மக்களுக்கு

நேரமில்லை. 


எல்லோரும் 

ஓடிக்கொண்டே

இருக்கிறார்கள்.


எங்கே 

ஓடுகிறோம் 

என்பதை அவர்கள் 

அறிந்திருக்கவில்லை. 


ஏன் 

ஓடுகிறோம் 

என்பதும் 

அவர்களுக்கு

தெரியாது. 


மற்றவர்கள் 

ஓடுவதை

பார்த்து

இவர்களும் 

ஓடுகிறார்கள்.


பதவி 

வேட்டையை 

மேற்கொண்டு 

ஓடுகிறார்கள். 


பணத்தை

துரத்தியபடி 

ஓடுகிறார்கள். 


மற்றவர்களுக்கு 

தேவையானவை 

எல்லாம் 

தங்களுக்கும் 

தேவை என்று...

 

ஒருவரை

ஒருவர் 

முட்டிகொண்டு

ஓடுகிறார்கள்.


தனி

தன்மையை

இழந்து...


' கார்பன் '

பிரதிகள் போல் 

செயல்படுகிறார்கள்.


இப்படி 

ஓடுவதன் 

பெயர் வாழ்க்கை 

இல்லை.


இந்த 

இடைவிடாத 

பரபரப்பு...


ஒருவகையான 

நோய் மட்டுமே 

ஆகும்.


- ஓஷோ -


பணமோ

பதவியோ

சொத்தோ

மட்டுமே...


நம் 

வாழ்க்கையில்

முக்கியம்

இல்லை.


அதையும்

தாண்டி

ஒன்றுள்ளது. 


அது...


அது...


எந்த 

நிலையிலும்

நம் மனதை நாம்

மகிழ்ச்சியாக

வைத்து 

கொள்வதுதான்.


' போதும் 

  எனும் மனமே 

  பொன் செய்யும் 

  மருந்து '


என்னும்

முதுமொழிக்கு ஏற்ப...


நம்

மனதை

நாம் பழக்க

படுத்தி கொண்டால்...


இனி

எல்லாம் சுகமே.


வாங்க...


முயற்சிகள்

செய்யலாம்.



No comments:

Post a Comment