காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்ஜூன்-24
விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் ஆஸ்திரியாவில் ஸ்டைரியா எனும் இடத்தில் 1883-ஆம் ஆண்டு ஜூன்-24 அன்று பிறந்தார். க்ராஜ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று 1910-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். 1944-ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார்.
1911 – 1913 ஆண்டுகளில் விக்டர், அயனைசிங் கதிர்வீச்சு(Ionizing radiation) பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இக்கதிர்வீச்சு பூமியிலிருந்து செல்லச்செல்ல அதன் கதிர்வீச்சின் அளவு குறையும் என்று அறிவியலாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் விக்டர், பாராசூட்டின் உதவியோடு கடல் மட்டத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உயரம் வரை பகல் மற்றும் இரவு என்று இருவேளைகளிலும் சென்று எலக்ட்ரோஸ்கோப் கருவியினைக் கொண்டு அயனைசிங் கதிர்வீச்சின் அளவினை பரிசோதனை செய்தார்.
பூமியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை அதன் கதிர் வீச்சு குறைந்திருந்தது. ஆனால் அதன்பிறகு உயரம் செல்லச் செல்ல அயனைசிங் கதிர்வீச்சின் அளவு கூடிக்கொண்டே சென்று ஐந்து கிலோ மீட்டர் உயரத்தில் கதிர்வீச்சின் அளவு இரண்டு மடங்கானது. இக்கண்டுபிடிப்பின் மூலமாக அயனைசிங் கதிர்வீச்சானது பூமியின் வெளிப்புற வளிமண்டலத்தை ஊடுருவும் தன்மை கொண்டது என்பதை உணர்த்தியது. 1925-ஆம் ஆண்டு ராபர்ட் ஆன்ட்ரிவ் மிலிக்கன் என்ற விஞ்ஞானி, விக்டரின் அயனைசிங் கதிர்வீச்சு சோதனையை உறுதி செய்து அக்கதிர்வீச்சுக்கு ”காஸ்மிக் கதிர்வீச்சு” என்று பெயர் சூட்டினார்.
இக்கண்டுபிடிப்பிற்காக விக்டர் மற்றும் அவருடன் இணைந்து பணிசெய்த ராபர்ட்டுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு 1936- ஆம் ஆண்டு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. விக்டரின் காஸ்மிக் கதிர்வீச்சு அணு இயற்பியலில் பல கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணமாக இருந்தது.
No comments:
Post a Comment