Saturday, 12 June 2021

இன்றைய தினம்



சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் - ஜூன் 12:

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்  முறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.  

குழந்தைத் தொழிலாளர்  முறை காரணமாக   உடல் ரீதியான பாதிப்பு  
உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும் உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு முதலான பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர்

2006 அக்டோபர் 10ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த இந்திய அரசு தடைவிதித்துள்ளது. பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை கணக்கெடுக்கும் ஆசிரியர்கள், குழந்தை தொழிலாளர் பிரச்னைகளை பெற்றோருக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசு விடுதிகளில் வயது வித்தியாசமின்றி தங்க அனுமதிக்க வேண்டும். ஊக்கத்தொகையும் தர வேண்டும். இவ்வாறு அரசின் அனைத்து துறைகளும், ஒரே சிந்தனையுடன் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க செயல்பட்டால், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறும். இன்றைய நாளில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க சபதம் ஏற்போம்.
 

No comments:

Post a Comment