Monday, 7 June 2021

இன்றையதினம்

 உலக உணவு பாதுகாப்பு நாள் -  ஜூன் 07;


உலகில் உணவு சுகாதாரக் குறைபாட்டால் பல நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.  தற்போது உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகமாக உள்ளதால் மக்கள் உணவு சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வாருகின்றனர்.   குறிப்பாக உணவு விடுதிகளுக்குச் செல்வது,  வெளி உணவுகளை சாப்பிடுவது போன்றவை பெருமளவில் குறைந்துள்ளது. உலக சுகாதார மையம் வீட்டில் சமைக்கும் உணவுகளைச் சாப்பிடுவதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.  மேலும் பாதுகாப்பற்ற உணவால் 200 வகை நோய்கள் உண்டாகலாம் எனவும் 10க்கு ஒருவர் இவ்வாறு பாதிக்கப்படுவதாகவும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வருடத்துக்கு இவ்வாறு சுமார் 4.2 லட்சம் பேர் மரணம் அடைவதாக அறிவித்துள்ள மையம் உணவு பாதுகாப்புக்காக ஐந்து முக்கிய விதிகளை அறிவித்துள்ளது.

சுத்தமாக இருக்கவும், சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளைப் பிரித்து வைக்கவும், முழுமையாக வேக வைக்கவும், உணவுப் பொருட்களைச் சரியான வெப்ப நிலையில் வைக்கவும் , பாதுகாப்பான நீர் மற்றும் பொருட்களால் சமைக்கவும்.

No comments:

Post a Comment