பள்ளி காலை
வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2022
திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: இரவச்சம்
குறள் : 1064
இடமெல்லாம்
கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச்
சால்பு.
பொருள்:
வாழ்வதற்கு ஒரு
வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த
வையகமே ஈடாகாத அளவுக்கு பெருமையுடையது.
பழமொழி :
It is most blessed to give than to receive.
ஏற்பதைவிட இடுவது சிறப்பு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. "உன் திறமையோடு உன்
வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும்.
2. எனவே உழைத்திடு உறுதியாய்.
உயர்ந்திடு வானத்திற்கு.
பொன்மொழி :
உலகில் எப்படி வாழ்வது
என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவிற்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே
வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.
பொது அறிவு :
1.தனது உடம்பினை விட நீளம்
கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?
பச்சோந்தி .
2.ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?
வரிக்குதிரை.
English words & meanings :
mag·ne·to·sphere
- A region surrounding a planet, star etc. Noun. Our solar system has
magnetosphere around it. காந்த மண்டலம். பெயர்ச் சொல்.
ஆரோக்ய
வாழ்வு :
அடிக்கடி தேங்காய் பால்
குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது.
தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும்.
NMMS Q 60:
Book
: Paper :: Table : ? a) School. b) Student. c) Wood. d) Chair.
Answer
: Wood
செப்டம்பர் 15
அனைத்துலக சனநாயக நாள்
அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித
உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும்
முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை
192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.
நீதிக்கதை
கடமையே வெற்றி தரும்
ஒரு குரு நாதருக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலை செய்ய
முடியவில்லை. சீடர்களை அழைத்து எனக்கு பிறகு நம் ஆசிரமத்தைக் கவனிக்க தகுதியானவர்
யாரோ அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும்
உன்னிப்பாக கவனிப்பேன் சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார்.
தலைவராகும் ஆசையில்
எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர். குரு நாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர்.
ஒரு முடிவுக்கு வந்தவராக குரு நாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய
சீடனைக் காட்டி இவரே நம் மடத்தின் புதிய தலைவர் என அறிவித்தார். மற்றவர்கள்
அதிர்ந்தனர்.
குரு நாதரே இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை.
குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே என்றனர்.
அது தான் அவரது நற்குணமே நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ
எப்போதும் போல் இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை.
என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும்
கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி
தரும் என்றார் குரு நாதர்.
இன்றைய செய்திகள்
15.09.22
* அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர்
மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
* தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு
அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
* பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை முதல்வர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* அண்ணா பிறந்த தினத்தையொட்டி மதுரையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில்,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைக்கிறார். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பள்ளிகளில்,
செப்டம்பர்-16 முதல் திட்டம் அமலாகிறது.
* குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் 1098, கடந்த 26
ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இந்த எண்ணை மத்திய அரசு சிங்கிள்
ஹெல்ப்லைன் எண்ணான 112வுடன் இணைத்துள்ளது.
* தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட 253 பதிவு செய்யப்பட்ட
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
* இலங்கைக்கு இந்த ஆண்டில் மட்டும் 380 கோடி டாலர் உதவி - இந்தியா
தகவல்.
* கடந்த 6 மாதங்களாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த
கார்கிவ் நகரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் உக்ரைன் கொண்டு வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கார்க்கிவ் நகரின் முக்கிய இடங்களில் உக்ரைனின் கொடி உயர பறந்து
வருகிறது.
* இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான
ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
* தேசிய டென்பின் பவுலிங் போட்டியில் தமிழக வீராங்கனை சபீனா
சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
* உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த்,
பிரனாய் முன்னேற்றம்.
Today's Headlines
* On the occasion of Anna's birthday, Chief Minister M. K.
Stalin has ordered to give Anna Medals to 127 Tamil Nadu police, uniformed
officers and employees.
*The incidence of flu fever among children is increasing
all over Tamil Nadu. Due to this, hospitals are overflowing. 100
children have been admitted in Egmore hospital in a single day.
* Chief Minister M.K.Stalin launched the
"Chirpi" program for the betterment of school students.
* On the occasion of Anna's birthday, Chief Minister M. K.
Stalin will inaugurate the breakfast program for government school students in
Madurai today. In other schools selected for this, the scheme will be
implemented from September-16.
* Childline 1098, which is exclusively for children, has been
running successfully for the past 26 years and has been merged with the central
government's single helpline number 112.
* The Election Commission has ordered the suspension of 253
registered unauthorized political parties, including 14 parties from Tamil
Nadu.
* 380 crores in aid to Sri Lanka this year alone - India
News
* Ukraine has brought under its control the city of
Kharkiv, which was under the control of Russian forces for the past 6
months. Following this, the flag of Ukraine is flying high in the main
places of Kharkiv city.
* Australia's squad for the 3-match T20I series against
India has been announced.
* Tamil Nadu player Sabina has won the champion title in
the National Tenpin Bowling Tournament.
* Indian players Srikanth, Pranai progress in Badminton
world rankings.
Covai women
No comments:
Post a Comment