Sunday, 17 May 2020

இன்று

தடுப்பூசிகளின் தந்தை பிறந்த தினம்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து
கண்டுபிடித்த எட்வர்டு ஜென்னர் (Edward Jenner) பிறந்த
தினம் இன்று (மே 17).

இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் (1749) பிறந்தார். தந்தை மதச் சடங்குகள் செய்பவர்.14-வது வயதில் டேனியல் லட்லாவ் என்ற அறுவை சிகிச்சை
நிபுணரிடம் சேர்ந்து 7 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி
பெற்றார். மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக
மாறினார். கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் கண்டவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கருத்தில் ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் 1765-ல் ஒரு கட்டுரை எழுதி லண்டன்மருத்துவக் கழகத்துக்கு
அனுப்பினார். அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை. பெரியம்மைக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்தே தீருவது என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி
மேற்கொண்டார். 1792-ல் செயின்ட் ஆண்ட்ரூஸ்
பல்கலைக்கழகத்தில் மருத்துவப்ப ட்டம் பெற்றார். இயற்கையைஅதிகம் நேசித்தார்.

குயில்களின் வாழ்க்கை முறை குறித்து ஆய்வு
மேற்கொண்டு பல  கட்டுரைகளை வெளியிட்டார்.
1796-ல் கவ் பாக்ஸ் நோய் கண்ட பெண்ணின் விரலில் இருந்து கிருமியை எடுத்து ஒரு சிறுவனுக்கு செலுத்தினார்.

சிறுவனும்நோயால்தாக்கப்பட்டான். 7 வாரங்கள் கழித்து பெரியம்மையால்தாக்கப்பட்டவர் உடலில் இருந்துகிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில்
செலுத்தினார். ஆனால், அந்தசிறுவனை பெரியம்மை
தாக்கவில்லை.தொடர்ந்து பலரிடம் நடத்தப்பட்ட
சோதனை வெற்றியடைந்தது.

கவ் பாக்ஸ் (cow pox) கிருமிகளைமென்மைப்படுத்தி ஊசிமூலம்ஒருவரது உடலில்செலுத்தினால் அவரை
பெரியம்மை தாக்காது என்பதை திட்டவட்டமாக
நிரூபித்தார்.ஆராய்ச்சி முடிவுகளை 1778-ல் வெளியிட்டார்.இயற்கையையும்மனிதகுலத்தையும்
அளவுகடந்து நேசித்த இவர்தனது இந்த அரிய
கண்டுபிடிப்புக்கு எந்த காப்புரிமையும் பெறாமல்
இலவசமாக வழங்கினார்.

அம்மை குத்துதல் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள்
எழுதினார். ஏழை,எளியவர்களுக்கு இலவசமாக
அம்மை ஊசி குத்தினார்.தினமும் இவரது அறைக்கு
முன்பு சுமார் 300 பேர் வரிசையில் நின்று அவரிடம் அம்மை தடுப்பூசிபோட்டுக்கொண்டனர். ஜென்னரை கவுரவித்துபிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ல் 10 ஆயிரம் பவுண்டுகள்வழங்கியது. 4 ஆண்டுகளுக்குப்
பிறகு மேலும் 20 ஆயிரம்பவுண்டுகளை வழங்கியது.
அந்தத் தொகையை கொண்டு 1808-ல் தேசிய தடுப்பூசிக் கழகத்தை நிறுவினார்.

No comments:

Post a Comment