Thursday, 21 May 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை....*  ( 21 .05 .2020)

*மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு*

*ஆனால்.....*

*#வண்டிக்காரன் உயிரில்லாத வண்டியை....*
*அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..*
*எந்த இடம் செல்ல வேண்டும்...*
*என்பதை தீர்மானித்து, வண்டியை செலுத்துவான்.*

*#எவ்வளவு_தூரம்...*
*#எவ்வளவு_நேரம்...*
*#எவ்வளவு_பாரம்...*

*அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!அறிவிருந்தும்.....*
*சுமப்பது தானாக இருந்தாலும் மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது...*

*அதுபோல....*

*உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா,* *உயிர் என்ற மாட்டுடன் பூட்டி*
*இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்....*

*#அவனே_தீர்மானிப்பவன்*
*#அவன்_இயக்குவான்..*
*#மனிதன்_இயங்குகிறான்..*

*#எவ்வளவு_காலம்..*
*#எவ்வளவு_நேரம்..*
*#எவ்வளவு_பாரம்..*

*#தீர்மானிப்பது_இறைவனே*

*இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் டிசைன்..!*
*இதுதான் இறைவன் நமக்கு தந்திருக்கும் அசைன்மென்ட்..!*
*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*
*இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.*

*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே!.*

No comments:

Post a Comment