Saturday, 23 May 2026

8 th வேதியியல் Full test

8th Science Chemistry Full Test

8 ஆம் வகுப்பு அறிவியல் - வேதியியல் முழுத் தேர்வு

இணைய வழி மாதிரி வினாடி-வினாத் தேர்வு

1. சால்வே முறை _______________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
2. ஆக்சிஜனின் இயற்பண்புகளில் வேறுபட்டது எது?
3. கார்ல் வில்கம் ஷீலே என்பவரால் முதன்முதலில் காற்றிலிருந்து ____ பிரித்தெடுக்கப்பட்டது.
4. நியூட்ரான் இல்லாத ஒரே தனிமம் எது?
5. புரோட்டான்கள் ____ மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.
6. கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.
7. நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ______________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.
8. ஆனோடு கதிர்களின் பண்புகளில் வேறுபட்டது எது?
9. சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடை செலுத்தும்போது கரையாத ____ உருவாகிறது.
10. மெக்னீசியம், இரும்பு மற்றும் சோடியம் போன்ற உலோகங்கள் ஆக்சிஜனில் எரிந்து தருவது எது?
11. அசோட் எனப்படுவது எது?
12. ஒரு அலகு நிறை கொண்ட ஒரு பொருளின் வெப்பநிலையை ____ ஆக உயர்த்த தேவையான வெப்பத்தின் அளவு அப்பொருளின் தன் வெப்ப ஏற்புத் திறன் எனப்படும்.
13. சேர்மங்களின் பகுதிப்பொருள்கள் எவற்றிலிருந்து பெறப்படுகின்றன என்பதின் அடிப்படையில் அவற்றை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
14. காகிதத்தை மடித்தல் மற்றும் விரித்தல், ஈரத்துணிகளை உலர்த்துதல், இரும்புக்கம்பியை வளைத்தல் போன்ற செயல்கள் ______________ மாற்றங்களுக்கான உதாரணங்களாகும்.
15. வேதி மாற்றத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் எத்தனை?
16. கூற்று 1: என்சைம் என்ற உயிரி வினைவேகமாற்றி மூலம் நடைபெறும் வேதிவினை காரணமாக துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்பட்டு உணவின் தரம் குறைகின்றது.
கூற்று 2: முட்டைகள் அழுகும்பொழுது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகிறது.
17. ஆப்பிள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் செல்கள் ____________ அல்லது ____________ என்ற என்சைமைக் கொண்டுள்ளன.
18. கூற்று 1: வெள்ளிப் பொருள்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன.
கூற்று 2: அதுபோன்று தாமிரத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்ட பித்தளைப் பாத்திரங்கள் நீண்ட நாட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புகொள்ளும்பொழுது பச்சைநிறப்படலத்தை உருவாக்குகின்றன.
19. மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ____________ ஐ உருவாக்குகின்றன.
20. ____________ ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் C.W.ஷீலே ஆக்சிஜனைக் கண்டறிந்தார்.
21. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கு அடுத்தபடியாக இந்த அண்டத்தில் பரவலாக மூன்றாவதாகக் காணப்படும் தனிமம் ____________
22. ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட ____________ மடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது.
23. ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன், சல்பர், பாஸ்பரஸ் போன்ற அலோகங்களுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து அமிலத்தன்மை வாய்ந்த ____________ ஆக்சைடுகளை உருவாக்குகின்றது.
24. ____________ என்பது நீரேறிய இரும்பு (III) ஆக்சைடு ஆகும்.
25. மனித உடலில் ____________ அதிக அளவில் காணப்படும் தனிமம் ஆக்சிஜன் ஆகும் (நைட்ரஜன் 4வது இடம்).
26. சனிக்கோளின் துணைக்கோள்களுள் பெரிய துணைக் கோளான டைட்டனின் वायुமண்டலத்தில் ____________ நைட்ரஜன் உள்ளது.
27. வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் ____________ கார்பன் டைஆக்சைடு உள்ளது.
28. கூற்று: நீரின் வழியே மின்னாற்றலைச் செலுத்தும்போது அது ஹைட்ரஜன் ($H_2$) மற்றும் ஆக்சிஜனாகப் ($O_2$) பிரிகிறது.
காரணம்: மின்னாற்றலின் மூலம் நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கும் செயல்முறை மின்னாற்பகுத்தல் எனப்படும்.
29. தூய நீரின் அடர்த்தியானது ____________ கி/செ.மீ$^3$ ஆகும்.
30. பனிக்கட்டியானது மிகவும் அதிக உருகுதலின் உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது. அதன் மதிப்பு ____________ கலோரிகள்/கிராம் ஆகும்.
31. கூற்று 1: போதுமான அளவு குளோரின் சேர்க்கப்படும் நிகழ்வானது குளோரினேற்றம் எனப்படுகிறது.
கூற்று 2: கிருமிகளை அழிப்பதற்காக ஓசோன் வாயுவும் உட்செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு ஓசோனேற்றம் என்று பெயர்.
32. துணி துவைத்தல், சமைத்தல், குளித்தல் போன்றவற்றிற்காக ஒரு நபர் ஒரு நாளைக்குச் சராசரியாக ____________ லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்.
33. நீரினை மின்னாற்பகுக்கும் போது எதிர்மின் வாயில் (Cathode) சேகரிக்கப்படும் வாயு எது?
34. 1781 ஆம் ஆண்டில் நீரை முதன்முதலில் தயாரித்தவர் யார்?
35. அதிகப்படியான உரங்கள் நீர் நிலைகளில் சேர்வதால் ஆல்காக்கள் வேகமாக வளர்வது ____________ எனப்படும்.
36. நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ____________ நிறமாக மாறுகிறது.
37. இயற்கையில் உள்ள பழங்கள், காய்கறிகளில் காணப்படும் அமிலங்கள் எவை?
38. உணவுப் பொருட்களைப் பாதுகாக்கப் பயன்படுவது எது?
39. செயற்கை நிறங்காட்டிக்கு எடுத்துக்காட்டு எது?
40. சிவப்பு எறும்பின் கொடுக்கில் ____________ அமிலம் உள்ளது.
41. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும் தாது ஆகும்?
42. பின்வரும் எத்தனிமத்தின் பெயர் அறிவியல் அறிஞரின் பெயரிலிருந்து பெறப்பட்டது?
43. சிலிக்கான், ஜெர்மானியம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்:
44. கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?
45. துப்பாக்கித் தூள் தயாரிக்க மற்றும் ரப்பரை கெட்டிப்படுத்த (வல்கனைஸ் செய்ய) பயன்படும் அலோகம் எது?
46. ஏன் ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன?
47. உலோக போலிகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
48. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி எது?
49. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் ______________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.

தேர்வு நிறைவடைந்தது!

0 / 49

வாழ்த்துகள்! உங்களது டிஜிட்டல் சான்றிதழைப் பெற கீழே பெயரைப் பதிவு செய்யவும்.



உருவாக்கம்: இரா.செந்தில்குமார், B.T.ASST.,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காப்பரத்தாம்பட்டி, சேலம் மாவட்டம்.

Powered by curieyasity.blogspot.com

No comments:

Post a Comment